districts

img

30 அடி உயரத்திற்கு சாலையில் பீச்சி அடித்த தண்ணீர்

அன்னூர், மார்ச் 22. அத்திக்கடவு - அவிநாசி திட்ட பிர தான குழாயில் சோதனை ஓட்டத்தின் போது உடைப்பு ஏற்பட்டதால் சாலை யில் சுமார் 30 அடி உயரத்துக்கு தண் ணீர் பீச்சியடித்தது. இதனால், பிரதான சாலை கடல் போல் காட்சியளித்தது. கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள குன்னத்தூராம் பாளை யத்தில் அத்திக்கடவு - அவிநாசி நிலத் தடி நீர் செறிவூட்டும் திட்ட 6 ஆவது நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள் ளது. இங்கு கடந்த 19 ஆம் தேதி 5  ஆவது நீர் ஏற்ற நிலையத்திலிருந்து சோதனை ஓட்டத்துக்கு தண்ணீர் வந் தது. அந்த தண்ணீர் அவுட்லெட் வாயி லாக குன்னத்தூராம்பாளையம் குளத் திற்கு திறந்து விடப்பட்டது. இந்நிலை யில் நீரேற்று நிலையத்தில் அமைக் கப்பட்டுள்ள 6 மின்மோட்டார்களில் ஒரு மோட்டாரில் புதனன்று நீரேற்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட் டது.  இதனையடுத்து அன்னூரிலி ருந்து இந்த திட்டத்தில் செல்லும் பிர தான குழாய்களில் தண்ணீர் விடப் பட்டு பரிசோதனை நடைபெற்றது. அப் போது, வடவள்ளி ஊராட்சி பெரிய புத்தூரில் பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அன் னூர் - காரமடை சாலையில் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித் தது. இதனால்  சாலையோரத்தில் தண் ணீர் குளம் போல் தேங்கி நின்றது.  சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தக வலின் பேரில் சோதனை ஓட்டத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதே போல் குருக்கிலியம்பா ளையம், சாலையூர் பகுதிகளில்  குழா யில் கசிவு ஏற்பட்டு சில இடங்களில்  தண்ணீர் குளம் போல் தேங்கியது.  கசிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு  செய்து ஊழியர்கள் உடைப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.