districts

img

நகர்ப்புற உள்ளாட்சி ஒப்பந்த தொழிலாளர் ஊதியத்தை பறிப்பதா? சிஐடியு தலைமையில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், ஜூன் 12- திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள் ளாட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலை யைப் பறித்து ஆட்குறைப்பு செய்வதுடன், ஊதியத்தையும் குறைப்பதைக் கண்டித்து சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்  சங்கத்தின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  திருமுருகன் பூண்டி நகராட்சியில் நேரடி யாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி யாளர்கள் வேலை செய்து வந்த நிலையில், தனியார்மய தீர்மானம் நிறைவேற்றி அந்த  தூய்மைப் பணியில் ஆட்குறைப்பு செய்ய வும், வேலை செய்வோரின் ஊதியத்தைக் குறைக்கவும் அநீதியான முறையில் நடவ டிக்கை எடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை யைத் தடுக்க வேண்டும். தூய்மைப்பணியாளர் களுக்கு மாவட்ட ஆட்சியர் அரசாணைப்படி குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூபாய் 610  வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் பிடித்ததில்  ஒப்பந்த நிறுவனம் சட்டப்படி செலுத்த வேண் டிய பங்குத் தொகையை செலுத்தி, ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப் பூர் மாநகராட்சியில் குடிநீர் ஒப்பந்த ஊழியர்க ளுக்கு இரண்டு மாதமாக ஊதியம் நிலுவை யில் உள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும். பல்லடம் டிபிசி ஊழியர்களுக்கு ஒரு மாதமாக வேலை வழங்கவில்லை, உட னடியாக அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். மேலும் ஊதிய குறைப்பில் ஈடுபடு வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தூய்மை, குடிநீர்  பணியாளர்கள், ஓட்டுநர்கள், டிபிசி ஊழியர் கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  திங்களன்று சிஐடியு தலைமையில் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட சிஐடியு ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் இப்போராட்டம் தொடங்கியது. இதைய டுத்து சம்பவ இடத்துக்கு வந்த தெற்கு வட் டாட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து சிஐடியு நிர்வாகிகள் மற் றும் தூய்மைப்பணியாளர்கள் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கூறி னர். நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் ஒப் பந்ததாரர்களை அழைத்து ஊதிய பிரச்சனை கள் குறித்து பேசுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஏற்கனவே இதுகுறித்து பல முறை அளித்த மனுக்களின் மீது என்ன நடவ டிக்கை எடுத்துள்ளீர்கள். இதையேதான் சென்ற முறையும் கூறினீர்கள். எங்களை  காக்க வைப்பதற்கு பதிலாக ஒப்பந்ததார்களை  இன்றே அழைத்து பேசுங்கள் என கூறி  தூய்மைப்பணியாளர்கள் மீண்டும் காத்தி ருப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.  இந்தப் போராட்டத்தில், சிஐடியு மாவட்ட  தலைவர் சி.மூர்த்தி, உதவித்தலைவர் சி.‌ பாலன், ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் கள் சங்க மாவட்ட தலைவர் பி. பழனிசாமி உட்பட தூய்மை பணியாளர்கள் மற்றும்  குடிநீர் பணியாளர்கள் 200க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.