உடுமலை, ஏப்.15- இந்தியா கூட்டணியின், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ் வரசாமியை ஆதரித்து, உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாகன பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. அப்போது, மக்கள் விரோத மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, ஏப்ரல் 19 ஆம் தேதி, வாக்குசாவடிக்கு சென்று உடுமலை மற்றும் மடத்துக்குளம் மக்கள் உதயசூரியன் சின்னத்தில், வாக்குகளை அளிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்யப்பட்டது. உடுமலை நகரக்குழு உடுமலை நகரக்குழு செயலா ளர் தண்டபாணி தலைமையில் சின்னவீரம்பட்டியில் துவங்கிய பிரச்சாரத்தை, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் துவக்கிவைத்து பேசினார். பின்னர் இந்த பிரச்சாரம் சிவசக்திகாலனி, பெரியகோட்டை, பழைய பேருந்து நிலையம், கொல்லம்பட்டரை, காந்திசவுக், ராமசாமிநகர், பழனி யாண்டவர்தகர், ரயில்நிலை யம், யூனியன் ஆபிஸ், அண்ணாகு டியிருப்பு, கணக்கம்பாளையம், எஸ்.வி.புரம், போடிபட்டி மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்டக்குழு உறுப் பினர் பஞ்சலிங்கம் உள்ளிட்ட திரளனோர் கலந்து கொண்டார் கள். உடுமலை ஒன்றியக்குழு உடுமலை ஒன்றியம் மருள்பட்டி யில் கட்சியின் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் பிரச்சா ரத்தை துவக்கிவைத்து பேசினார். தொடர்ந்து, கண்ணமநாயக்கனூர், குரல்குட்டை, ஆலாம்பாளை யம், பள்ளபாளையம், கொங்க லக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை, ஜல்லிபட்டி, தளி, வாளவாடி, சாளையூர் உள்ளிட்ட பகுதிக ளில் பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் உடுமலை ஒன்றியக்குழு செயலாளர் கனக ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளனோர் கலந்து கொண்டனர். மடத்துக்குளம் தாலூகா மடத்துக்குளம் தாலூகா நால் ரோட்டில் துவங்கிய தேர்தல் பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலூகா செயலாளர் ஆர்.வி. வடிவேல் தலைமை வகித்தார். இதைத்தொடர்ந்து, நகரசிங்காபு ரம், கிருஷ்ணாபுரம், சாலரப்பட்டி, பாபான்குளம், ரெட்டிபாளையம், கொமரலிங்கம், கொழுமம் மற்றும் கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் கட்சியின் தாலூகா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக் கையை பொது மக்களிடம் பிரச் சாரம் செய்தனர்.