திருப்பூர், ஜன.22 - தமிழ்நாடு விவசாய சங்கம் காத் திருப்பு போராட்டம் அறிவித்ததன் எதிரொலியாக அவிநாசி - அத்திக் கடவு திட்டத்தில் சொக்கனூர் எருக் கல்மேடு குட்டைக்கு இணைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி விவ சாயிகள் முன் வைத்துள்ள கோரிக்கை வெற்றி பெற்றுள்ள தாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், சொக்கனூர் ஊராட்சி, காட்டுப் பாளையம் எருக்கல்மேடு புல எண். 296/2ல் உள்ள அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் இணைக் கப்பட்ட குட்டையில் பொருத்தப் பட்டிருந்த இயக்க பராமரிப்பு அமைப்பு (ஓ எம் எஸ்) கருவி களை இரு தனிநபர்கள் ஆட் சேபனை செய்தார்கள் என்று பொதுப்பணித்துறை நீர்வளர் துறை அதிகாரிகள் ஒரு வருடத் திற்கு முன்பு திரும்ப எடுத்துச் சென்று விட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், தமிழ் நாடு விவசாய சங்கத்தில் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படை யில் பல்வேறு புகார் மனுக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும், நீர்வளத் துறை சிறப்பு திட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது.
இதையடுத்து அவிநாசி வட் டாட்சியர் நடவடிக்கை மேற் கொண்டு குட்டையை நில அளவீடு செய்து எல்லை அத்துக் காட்டப் பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பர் 8ஆம் தேதியன்று சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் முன்பு 75க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கேற்ற ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மேலும் உரிய நடவடிக்கை இல்லாத தாலும், திரும்ப எடுத்துச் சென்ற கருவிகளை பொருத்தி, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் மேற்படி குட்டையை பயன்பெற செய்ய வேண்டும் எனவும் கோரி நீர்வள ஆதாரத்துறை சிறப்பு திட்ட கண் காணிப்பு பொறியாளர், அவிநாசி அலுவலகம் முன்பு திங்கள் கிழமை பாதிக்கப்பட்ட விவசாயிகளை திரட்டி காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு விவ சாய சங்கம் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு அறிவித்தது. இதையடுத்து சில தினங் களுக்கு முன்பு வருகை தந்த நீர் வளத்துறை சிறப்பு திட்ட கண் காணிப்பு பொறியாளர், பெருந் துறை செயற்பொறியாளர் உள் ளிட்ட அதிகாரிகள் மேற்படி குட்டையை நேரடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். இதன் பேரில், வெள்ளிக்கிழமை நீர்வள ஆதாரத்துறை சிறப்பு திட்டம், பெருந்துறை உதவி செயற் பொறியாளர் மற்றும் உதவி பொறி யாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட குட்டைக்கு வருகை தந்து பாதிக் கப்பட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் விவசாயிகள் கோரிக் கைபடி அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் உள்ளபடி எருக்கல் மேடு குட்டைக்கு உடனடியாக இணைப்பு வழங்க உரிய நடவ டிக்கை எடுத்து பணிகளை மேற் கொண்டு வருவதாக தெரிவித் தனர். அதன்படி சனிக்கிழமையன்று ஜேசிபி இயந்திரம் மூலமாக குழாய் இணைப்பு ஏற்படுத்தும் பணி மேற் கொள்ளப்பட்டது. தொடர்ந்து சில தினங்களுக்குள் திரும்ப எடுத்துச் சென்ற இயக்க பராமரிப்பு அமைப்பு கருவிகளை பொருத்து வதாகவும் தெரிவித்தனர். விவ சாயிகள் காத்திருப்பு போராட் டத்தில் முன்வைத்த கோரிக்கை களை நீர்வளத்துறை சிறப்பு திட்ட அதிகாரிகள் நிறைவேற்ற நடவ டிக்கை எடுத்து வருவதை கணக் கில் எடுத்துக்கொண்டு 23ஆம் தேதியன்று (இன்று) அவிநாசி நீர் வளத்துறை சிறப்பு திட்ட கண் காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு அறிவிக்கப்பட்ட காத் திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப் படுகிறது என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதி காரிகள் வருகை தந்த போது தமிழ் நாடு விவசாய சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். அப்புசாமி, தலைவர் கே.ரங்கசாமி மற்றும் பட்டம்பாளையம் நடராஜ் உள்ளிட்ட விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டனர். மேலும், கோரிக்கை நிறைவேற நடவ டிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் திற்கும் நன்றி தெரிவித்தனர்.