districts

img

அரசு காலிப்பணியிடங்களை நிரப்புக

ஈரோடு, டிச. 30- அரசுத் துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் ஈரோட்டில், இரு சக்கர வாகன  பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்க வேண்டும்,. அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். தனியார் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அம லாக்க வேண்டும். கல்வி நிலையங் களை தனியார் மயமாவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் ஈரோட்டில் இருசக்கர பிரச்சார பயணத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் திங்களன்று தொடங்கிய இப்பிரச்சார இயக்கத்திற்கு, வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் கே.துரைராஜ் தொடங்கி வைத்தார். இதில் விதொச  மாவட்டத்தலைவர் ஆர்.விஜயராக வன், முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.சசி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசி னார்.  இப்பிரச்சார இயக்கம், தாமரைப் பாளையம், சிவகிரி, எல்லக்கடை, எழு மாத்தூர், அவல்பூந்துறை, வெள் ளோடு, சென்னிமலை, குமரன் சிலை, ஈங்கூர், பெருந்துறை வழியாக காஞ்சி கோவில் ஆகிய பகுதிகளின் வழியே  பிரச்சாரம் மேற்கொண்டது. இதில், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் லோகநாதன் உள்ளிட்ட திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். செவ்வாயன்று எல்லீஸ்பேட்டை யில் தொடங்கும் இரண்டாவது நாள்  பயணம் கவுந்தப்படி, பவானி,  சித்தோடு, நசியனூர், சோலார், சூரம் பட்டி வழியாக வீரப்பன்சத்திரத்தில் நிறைவடைகிறது.