districts

img

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை, நவ.24- விடுமுறை தினமான ஞாயிறன்று உதகை  அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக திகழ்வதால், நாள்தோறும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து  வருகின்றனர். இந்நிலையில், உதகையில்  அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங் களில் ஒன்றான அரசு தாவரவியல் பூங்கா விற்கு விடுமுறை தினமான ஞாயிறன்று காலை முதல் ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வந்தனர். பூங்காவில் அமைந்துள்ள கண் ணாடி மாளிகை மற்றும் பச்சை பசேலென  காட்சியளிக்கக்கூடிய புல்வெளி மைதா னத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். அண்டை  மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள் ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த பள்ளி மற்றும்  கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கள், நண்பர்களுடன் ஆடி, பாடி மகிழ்ந்த னர்.