districts

உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை வரை நீட்டிப்பு

உதகை, ஜூன் 28- சுற்றுலா பயணிகள் வருகை அதி கரித்து காணப்படுவதால், உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோடை சீசன், 2 ஆவது சீசன் காலங்களில் லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் உத கைக்கு வருகை தரும்போது, ஆயி ரக்கணக்கானோர் உதகை மலை ரயி லில் பயணம் செய்ய ஆர்வம் காட்டு கின்றனர். ரயிலில் கூட்டம் அலை மோதுவதால், சிலருக்கு பயணச் சீட்டு கிடைக்காமல் போவதால் ஏமாற் றம் அடைகின்றனர். இதையடுத்து, கோடை சீசனின்போது, சிறப்பு மலை  ரயிலை இயக்க சேலம் கோட்ட  ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத் தது. இதன்படி, நீலகிரி சிறப்பு மலை ரயில் சேவை கடந்த ஏப்.14 ஆம்  தேதி முதல் தொடங்கியது. இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு மலை ரயில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு, உதகைக்கு 2.25 மணிக்கு வந்தடையும். இதேபோல் உதகையிலிருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மதியம் 4.20  மணிக்கு மேட்டுப்பாளையம் சென்ற டையும். இந்த ரயில் சேவை வாரத் தில் வெள்ளியன்று முதல் திங்கட் கிழமை வரை 4 நாட்கள் இயக்கப் பட்டது. இதில் முதல் வகுப்பு கட்டண மாக ரூ.630, 2 ஆம் வகுப்பு கட்டண மாக ரூ.465 வசூல் செய்யப்படுகி றது. இந்நிலையில், ஜூன் 26 ஆம் தேதி யன்று வரை சிறப்பு மலை ரயில்  சேவை இருக்கும் என்று ரயில்வே  நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரித்து காணப்படுகிறது. தற்போதும் அவர்கள் மலை ரயிலில் பயணம்  செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், முன்பதிவும் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் தற் போது சிறப்பு மலை ரயில் பய ணத்தை ஜூலை 30 ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த முறை மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு சனிக்கிழமையும், உத கையிலிருந்து மேட்டுப்பாளையத் திற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் சுற் றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். சுற்றுலா பயணிகள் முன் பதிவு செய்து பயணம் மேற்கொள் ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.