உடுமலை, டிச.14 - அமராவதி அணைக்கு மேல் அப்பர் அமராவதி நீர் தேக்க திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற் போது எழுந்துள்ளது. அமராவதி அணை திட்டம்: கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மூணாறு மலை பகுதி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆனை மலை வனப்பகுதியில் அமராவதி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு காவிரி யின் முக்கிய உப நதிகளில் ஒன்று. இவ் வாறு உருவாகும் அமராவதி ஆற்றின் குறுக்கே உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், கடல் மட்டத் திற்கு மேல் சுமார் 335 மீட்டர் உயரத்தில், அமராவதி அணை என்ற பெயரில் 90 அடி உயரத்தில் 4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை 1957ம் ஆண்டு கட்டப் பட்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள்: அமராவதி அணைக்கு கேரள மாநில பாம்பாற்றில் இருந்து வரும் நீர், தேனாறு, சின்னாறு ஆகிய மூன்று ஆறு கள் இணைத்து ஒன்று சேர்வது தான் அமராவதி ஆறாக மாறுகிறது. அமரா வதி அணையில் இருந்து வெளியேறும் நீர் ஆற்றில் செல்லும் போது சில உப ஆறுகள் அமராவதி ஆற்றில் கலக்கி றது. அவற்றில் குதிரையாறு, சண்முக நதி, நங்காஞ்சியாறு போன்ற ஆறுக ளின் மூலம் மேலும் கணிசமான அளவு தண்ணீர் கிடைக்கிறது. பாசனம் வசதி பெறும் பகுதிகள்: அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி மொத்தம் 839 சதுர கிலோ மீட்டர். மொத்த அணையில் 9.6 சதுர கிலோமீட் டர் பரப்பளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு, புதிய பிரதான கால் வாய் மற்றும் ராமகுளம் கால்வாய் அணையின் பிரதான ஒன்பது ஷட்டர் கள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் மூலம் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறு கிறது. மேலும் பல ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் வசதி பெற முக் கிய பங்கு வகுக்கிறது. அப்பர் அமராவதி திட்டம்: அமராவதி அணைக்கு நீர் ஆதார மாக உள்ள பாம்பாறு, தேனாறு, சின் னாறு உள்ளிட்ட மூன்று ஆறுகள் கூட் டாறு என்ற இடத்தில் இணைந்து அம ராவதி ஆறாக மாறுகிறது. இதில் இருந்து நீர் அணைக்கு செல்லும் பாதை யில் தான் துவானம் அருவி அமைந்துள் ளது. இங்கு மழை காலங்களில் தண் ணீரை சேமிக்கும் வகையில், 600 ஏக்கர் பரப்பளவில் அப்பர் அமராவதி அணை என்ற பெயரில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அப்பர் அமராவதி அணையின் நன்மைகள்: அமராவதி அணைக்கு மேல் அப்பர் அமராவதி அணை கட்டுவதன் மூலம் ஆண்டு தோறும் வீணாக கடலில் கலக் கும் தண்ணீரை சேமித்து வைப்பது டன், நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடி யும். மேலும், கோடை காலங்களில் அப் பர் அமராவதி அணையில் இருந்து தண் ணீரை அமராவதி அணைக்கு கொண்டு செல்லவும் முடியும். மேலும், வறட்சி காலங்களில் குடிநீருக்காக வன விலங் குகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை தடுக்க முடியும். விவசாயிகளின் கோரிக்கை: அமராவதி அணை கட்டும் போது ராமகுளம் மற்றும் ஆற்று பாசனம் மட் டுமே இருந்த நிலையில், தற்போது புதிய வாய்க்கால் மூலம் பாசனப் பரப்பை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அமராவதி பாசனப் பகுதியில் நெல் மற் றும் கரும்பு விவசாயம் செய்யும் நஞ்சை நிலமாக இருந்த விளை நிலம், தற் போது மக்காச்சோளம், காய்கறிகள் விவசாயம் செய்யும் புஞ்சை நிலமாக மாறியுள்ளது. அதேபோல் கோடை காலங் களில் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் போகும் சூழல் நிலவுகிறது. இது போன்ற நிலையை தடுக்கவே 50 ஆண்டுகளுக்கு முன்பு அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் நடை முறைக்கு வராததால் மழைக்காலங்க ளில் தண்ணீர் வீணாக கடலில் கலக்கி றது. எனவே அப்பர் அமராவதி அணையை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.