திருப்பூர், ஜூலை 13 – திருப்பூர் யுனிவர்சல் பள்ளியும், திருப்பூர் பள்ளி கல்வித் துறையும் இணைந்து புதன்கிழமை தூய்மை விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர். யுனிவர்சல் பள்ளி மாணவ, மாணவிகள் 350 பேர் வேலன் நகரில் இருந்து பட்டுக்கோட்டையார் நகர் வழியாக வெள்ளியங்காடு நால்ரோடு வரை இப்பேரணியை நடத்தி னர். இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, பொது இடத்தில் தூய்மை பராமரிப்பது பற்றி விழிப்புணர்வு வாசகங்கள் அடங் கிய பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பிச் சென்றனர். இதில் 52ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆனந்தி சுப்பிரமணி யம், தெற்கு காவல் துணை ஆய்வாளர் கந்தசாமி, தென்னம்பா ளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி கன குராஜ் ஆகியோர் பேரணியை தொடக்கி வைத்தனர். பள்ளி ஆசிரியர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். பள்ளி தாளாளர் சாவித்திரி ராஜகோபால் இதைத் தெரிவித்தார்.