districts

img

திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பாடு: மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க தொழிற்சங்கங்கள் முடிவு

திருப்பூர், டிச.12 - திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை யில் தேவையான மருத்துவர்கள் மற் றும் மருத்துவ உபகரணங்கள் ஆகிய  தேவைகளை உடனடியாக நிறைவேற்ற  திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் டிசம்பர்  16ஆம் தேதி விரிவாக மனு கொடுப்பது  என்று அனைத்து பனியன் தொழிற்சங் கங்கள் முடிவு செய்துள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து பனி யன் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட் டம் டிசம்பர் 12 காலை 11.30 மணிக்கு  பி.என்.ரோடு ஏஐடியுசி சங்க அலுவல கத்தில் நடைபெற்றது.  ஏஐடியூசி பனி யன் பேக்டரி லேபர் யூனியன் பொதுச்  செயலாளர் என்.சேகர் தலைமை ஏற் றார். ஏஐடியுசி பனியன் சங்க செயலா ளர் ஆர்.செந்தில்குமார், சிஐடியு பனி யன் சங்க பொதுச் செயலாளர் ஜி. சம்பத், சிஐடியு பனியன் சங்க துணைச் செயலாளர் துரைமுருகன், எல்பிஎப் பனியன் சங்க பொருளாளர் பூபதி, ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் சிவ சாமி, துணைத் தலைவர் தவமணி, எச். எம்.எஸ்., மாவட்டச் செயலாளர் ஆர். முத்துசாமி, எம்.எல்.எப் மாவட்டச் செய லாளர் மு.சம்பத், எம்.எல்.எப் பனியன்  சங்க செயலாளர் மனோகரன் ஆகி யோர் கூட்டத்தில் கலந்து கொண்ட னர்.  திருப்பூர் பனியன் தொழிற்சாலைக ளில் தொழிற்சாலை சட்டம், தொழில் தக ராறு சட்டம் உள்ளிட்டவைகளை முழு மையாக அமலாக்க வேண்டும். திருப் பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல் பாடுகள், அங்குள்ள தேவைகள், பெண் களின் பாலியல் புகார் கமிட்டிகள் அமைப்பது, பனியன் கம்பெனிகளில் அதன் செயல்பாடுகள், தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை பற்றி வரும் 16-ஆம் தேதி  மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விரிவாக  மனு கொடுத்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள வலியுறுத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.