கோவை, செப்.22- மக்களின் பிரச்சனைகளை திசை திருப்பும் வேலையைதான் ஒன்றிய அரசு செய்து வருகிறதென, தயா நிதி மாறன் எம்.பி. குற்றஞ்சாட்டி யுள்ளார். கோவையிலுள்ள ஒரு தனியார் விடுதியில், திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் மண் டல அளவிலான ஆலோசனை கூட் டம் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் முத்து சாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பி னர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்பின் தயா நிதி மாறன் செய்தியாளர்களிடம் பேசு கையில், கடந்த 10 ஆண்டுகளாக ஒன் றிய அரசு மக்கள் தொகை கணக் கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. ஆனால், பல நாடு களில் மக்கள் தொகை கணக்கெ டுப்பை நடத்திவிட்டனர். ஆனாலும், அதையெல்லாம் விட்டுவிட்டு ஒன்றிய அரசு “ஒரே நாடு, ஒரே தேர் தல்” நடத்த திட்டமிட்டு வருகிறது. இப்போது தான் காஷ்மீருக்கே தேர் தல் நடத்துகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தலில் பல குழப்பங்கள் உள் ளன. இதில், எழும் சந்தேகங்கள் குறித்து கேள்வி கேட்டால், பதில் ஏதுமில்லை. மக்கள் தங்களது பிரச் சனையை சொன்னால் ஒன்றிய அரசு அதை திசை திருப்புகிறது. உதார ணமாக, அன்னபூர்ணா ஓட்டல் உரி மையாளர் விவாகரத்தின் மூலம், கோவை மக்களை மிரட்டுகிறார்களோ என்று தோன்றுகின்றது. மருத்துவம் படிக்க வேண்டும் என் றால் சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்கின்றனர். நீட் தேர்வில் நடந்த முறைகேட்டில் அந்த துறை அமைச் சர் ராஜினாமா செய்தாரா? மதத்தை வைத்தே தொடர்ந்து பாஜக அரசியல் செய்து வருகிறது. அதிமுக மிக கஷ்ட மான காலத்தில் உள்ளது. முதுகு தண்டு வளைந்துள்ளதால் தான் அவர்களால் நிமிர முடியவில்லை. கட்சியை பாஜகவிடமும் அடிமை யாக வைத்திருந்ததே, எடப்பாடி பழ னிச்சாமி செய்த மிகப்பெரிய தவறு, என்றார். தொடர்ந்து, அதிமுகவின் வைத்தியலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு பதிலளித்த தயாநிதி மாறன், ஒன்றாக ஆட்சி செய்யும் போதும், பணம் வாங் கிய போதும் தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.