districts

img

போக்குவரத்து காவல்துறையின் அநியாய அபராதம்

சேலம், டிச.5- போக்குவரத்து காவலர்கள் கடு மையான அபராத தொகை வசூலிப் பதை கைவிட வலியுறுத்தி, பிரம் மாண்ட தலைக்கவசத்தை பிடித்துக் கொண்டு நூதன முறையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஒன்றிய மோடி அரசு சாலை  போக்குவரத்து சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த வாகன சட்டத் திருத்தம் மூலமாக மிகக்கடுமையான அபராத வசூல் வேட்டை நடைபெறுகிறது. இந்த அநியாய அபராதம் வசூலிப்பதை கைவிட வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர குழு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாநகரச் செயலாளர் பிரவீன்குமார் தலைமையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் அனைவரும் தலைக் கவசம் அணிந்தும், பிரம்மாண்ட மான தலைக்கவசத்தை கொண்டு வந்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். ஒன்றிய அரசு கொண்டு வந் துள்ள வாகன போக்குவரத்து சட்ட திருத்தத்தை அமல்படுத்த முடி யாது என்று கேரள அரசு கூறியது போல், தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். கடுமையான அபரா தம் விதிப்பதை தவிர்த்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும். தேவையான போக்குவரத்து கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவதற்கான ஒருங் கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே விபத்து மற்றும் உயிரிழப்புகளை குறைக்க  முடியும் என்றும் ஆர்ப்பாட்டம் மூல மாக வலியுறுத்தினர். இதில் திரளா னோர் பங்கேற்றனர்.