உடுமலை, ஏப்.8- தமிழகத்தில் நிலைத்து நிற்க, சமகாலத்திய மக்களுக்கு எதிரான நிகழ்வுகளை தயவு தாட்சண்ணியம் இன்றி பொது வெளிக்கு கொண்டு வரும் கவிஞர்களின் கவிதைகளே நிலைத்து நிற்கின்றன என உடுமலை இலக்கிய களத்தின் கூட்டத்தில் பேராசிரியர் கூறினார். உடுமலை இலக்கியக் களத்தின் இலக்கிய நிகழ்ச்சி மீனாட்சி திருமண மண்டபத்தில் சனியன்று, உடுமலை அரசு கலைக் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் மு.மதியழகன் தலை மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முனியப்பன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். அரசு கலைக் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் மு.ரஞ்சிதா “லதாவின் கழிவறை இருக்கை “ என்னும் நாவல் பற்றி திறனாய்வு செய்து பேசினார். பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலை வரும் நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய எழுத்தாள ருமான பேராசிரியர் எஸ். மோகனா தமிழ்ச்செல்வன் எழுதிய “பெண்மை என்றொரு கற்பிதம்” என்னும் நூல் குறித்து திறனாய்வுடன் கூடிய உரையை நிகழ்த்தினார். அதைத்தொ டர்ந்து உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் மு. மதியழகன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவின் “மிச்சம் இருக்கும் ஒன்பது விரல்கள்” என்னும் கவிதை நூல் பற்றி விரிவான ஆய்வுரையும், கவிதை தமிழகத்தில் நிலைத்து நிற்க சமகாலத்திய மக்களுக்கு எதிரான நிகழ்வு களை தயவு தாட்சண்ணியம் இன்றி பொது வெளிக்கு கொண்டு வரும் கவிஞர்களின் கவிதைகளே நிலைத்து நிற் கின்றன. தமிழ் மொழியில் கவிதைகள் நிலைத்து நிற்பது போல், ஆதவன் தீட்சண்யாவின் சமூக அக்கறை மிக்க கவி தைகளும் நிலைத்து வாழும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஆய்வு மாணவர்கள் சூர்யா, ஜீவிதா தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தெய் வானை நிகழ்ச்சிகள் குறித்த கருத்துகளைத் தெரிவித்தார். பேராசிரியர் ந. வேலுமணி மூன்று புத்தகங்களைப் பற்றி பேசி னார்.