districts

img

இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி

ஈரோடு, பிப்.1-    இருசக்கர வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பரிதா பமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த வர் வெங்கடேஷ் (34).  இவர் தனது இருசக்கர வாகனத் தில் விஜயமங்கலத்தில் இருந்து பல்லகவுண்டன் பாளை யம் சென்று கொண்டிருந்தார். பல்லகவுண்டன் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற கல்லூரி மாணவர் சரண் (21) என்பவர் ஓட்டி வந்த வாகனம் எதிர்பாராத விதமாக வெங்கடேசின் வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், அருகிலுள்ள வர்கள் அவர்களை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாப மாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஊத்துக் குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.