districts

img

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செவ்வாயன்று 7 நவீன அவசரகால ஊர்தி

திருப்பூர், மார்ச் 1- திருப்பூரில் ஆத்துப்பாளையத் தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் நூலகம் மற்றும் சோச லிச லட்சியத் தலைவர்களின் படத் திறப்பு விழா நடைபெற்றது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் ஆத்துப்பாளையம் கிளை சார் பாக நூலகம் மற்றும் சோசலிச லட்சி யத் தலைவர்களின் படத்திறப்பு விழா வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு உறுப்பினர் சந்தோஷ் இசைப்பி ரியன் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் பாலாஜி வரவேற் றார். வாலிபர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.மணிகண்டன் துவக்கி வைத்தார். இதில் புரட்சியாளர் சே  குவேரா மற்றும் புரட்சியாளர் பகத் சிங் படங்களை எஸ்.லோகேஸ்வரன் வழங்கினார். இந்த வீரர்களின் படங் களை வாலிபர் சங்க வடக்கு ஒன்றியப் பொருளாளர் ஆ.சிகாமணி, வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அருள் ஆகி யோர் திறந்து வைத்தனர்.  மாமேதை கார்ல் மார்க்ஸ், பாசி சத்தை முறியடித்த மாவீரன் ஸ்டாலின் ஆகியோர் படங்களை எஸ்.அருண்கு மார் வழங்க, மாதர் சங்க கிளைச் செயலாளர் ஏ.கீதாலட்சுமி, முன்னாள் ஒன்றியத் துணைச் செயலாளர் ஜெ.சங் கர் ஆகியோர் திறந்து வைத்தனர். மாமேதை லெனின் படத்தை எஸ்.ராசு என்கிற நாகேந்திரன் வழங்க, வடக்கு ஒன்றியத் தலைவர் டி.சதீஷ்குமார் திறந்து வைத்தார். புதிய நூலகத்தை வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளருமான ஆர்.காளியப்பன் திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வின் முடிவில் மார்க் சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் நிறைவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செய லாளர் கே.பழனிச்சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன் மற் றும் கிளை ஊழியர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். கிளைப் பொரு ளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.