districts

img

பொன்மலை தியாகிகளுக்கு நினைவஞ்சலி

ஈரோடு, செப்.5- திருச்சி மாவட்டம், பொன்மலை தியாகிகளின் 76 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் தட்சிணா ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு டீசல் பணிமனை, ஓபன்லைன் பகுதி, மின்சார பணிமனை ஆகிய பகுதிகளில் சங்கத்தின் கொடியேற்றி அனுசரிக்கப் பட்டது. சங்கத்தின் உதவி பொதுச்செயலாளர் கே.பிஜு தலை மையில் நடைபெற்ற நிகழ்வில் சேலம் டிவிசன் உதவித் தலைவர் சுப்ரமணி  மற்றும் தட்சிணா இரயில்வே பென்சனர்  சங்கத்தின் சேலம் டிவிசன் செயலாளர் சி.முருகேசன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

;