ஈரோடு, நவ. 9- பிஎஸ்என்எல் முன்னணி தோழர் பி.கருணாகரனுக்கு நினைவஞ்சலி கூட்டம் புதனன்று ஈரோடு டெலிபோன் பவன் வளாகத்தில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் பிஎஸ்என்எல்இயு மாவட்ட தலைவராகவும், ஒன்றுபட்ட என்எப்பிஇ மாவட்ட தலைவ ராகவும், மத்திய, மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பின் தலைவராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர் தோழர் பி.கருணாகரன். கடந்த 5 ஆம்தேதி உடல் நலக் குறைவு காரணமாக கால மானார். இவரது நினைவஞ்சலி கூட்டம் புதனன்று நடைபெற்றது. ஏஐபிடிபிஏ, பிஎஸ்என்எல்இயு, டிஎன்டிசிடபிள்யுயு அடங்கிய பிஎஸ்என்எல் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.சின்னச்சாமி தலைமை வகித்தார். ஏஐபிடிபிஏ மாநில துணை தலைவர் என்.குப்புசாமி, பிஎஸ்என்எல்இயு மாநில அமைப்பு செயலர் எஸ்.செல்வராஜன் உள்ளிட்ட சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி உரை நிகழ்த்தினர். இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் ஓய்வூதியர்கள், நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.