districts

img

நோயாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலியை குப்பை அள்ள பயன்படுத்துவதா?

கோவை, அக்.10- கோவை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் நோயா ளிகள் பயன்பாட்டிற்காக கொடுக் கப்பட்ட ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்கா லிகளில், மருத்துவ குப்பை கழிவு களை எடுத்துச் செல்வது, முகச்சு ழிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில், நாள தோறும் 6,500 முதல் 7,000 புற நோயாளிகள் வந்து செல்கின்ற னர். புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ வளாகத்தையும் சேர்த்து 3,200 மருத்துவ படுக்கை வசதிகள் உள்ளன. கோவை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவம னையை கோவை, திருப்பூர், நீல கிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட  மக்களும் பயன்படுத்தி வருகின்ற னர்.  மேலும், நாள்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஏராளமான குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் உள் ளது. இதனை துப்புரவு செய்வ தற்காக கிறிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்திற்கு குத்தகை விடப்பட் டுள்ளது. உணவு கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை மூட்டையாக கட்டி அதற்கான வாகனத்தில் இந்த நிறுவனம் எடுத்துச் செல்வதில்லை என புகார் கூறப்படுகிறது. நடக்க முடியாத நோயாளிகள் பயன்பாட் டிற்காக கொடுக்கப்பட்டுள்ள ஸ்ட்ரெக்சர் மற்றும் சக்கர நாற்காலி களில், இந்த குப்பைகளை இந் நிறுவனம் எடுத்துச்  செல்கின்றனர்.  இதனால் நோயாளிகள் சக்கர நாற்காலியை பயன்படுத்த முடியா மல், உறவினர்கள் தூக்கிச் செல் லும் அவல நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலாவிடம் கேட்ட போது, தனியார் நிறுவனத்திற்கு குப்பை அள்ளும் குத்தகை கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், எனினும் இந்த புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்து வதாக தெரிவித்துள்ளார்.