districts

img

தாமதமாகும் கழிவுநீர் கால்வாய் பணிகள் கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகள் கவலை

நாமக்கல், மே 21- கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறாததால் கடை வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று  வருகிறது. சாலை விரிவாக்கப் பணிகளுக் காக ஏராளமான வணிக, வர்த்தக கடை நிறு வனங்களின் பயன்பாட்டில் இருந்த இடங்கள், நெடுஞ்சாலைத்துறைக்கு வழங் கப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளிபாளை யத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலை யான பள்ளிபாளையம் காவல் நிலையம் எதிரில் சாலையோரம் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக கடந்த இரண்டு வாரங்க ளுக்கு முன்பாக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், தற்போது வரையிலும் அதற்கான பணிகள் நடைபெறாததால், 30க்கும் மேற்பட்ட கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் கூறுகையில், மேம்பாலப்பணிகள் ஆரம்பித்த நாள் முதலே பள்ளிபாளையம் பிரதான சாலை பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் தவிப்புக் குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது கடைக்கு வெளியே கழிவுநீர் கால்வாய் அமைப்பதாக கூறி நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டினர். குறுகிய காலத்தில் பணிகள் முடிந்துவிடும் என கூறிவிட்டே பணிகளை தொடங்கினர். ஆனால், தற்போது 20 நாட்களுக்கு மேலாகி யும் எவ்வித பணிகளும் தொடங்கப் படவில்லை. கடை வாடகை, மின்சார கட்டணம், குடும்ப தேவை என அனைத்துமே கடையின் சொற்பமான வருவாய் மூலமாகத்தான் சமாளித்து வந்தோம். தற்போது கடைகள் திறக்கப்பட முடியாத நிலை இருப்பதால், மிகுந்த பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். எனவே, விரைவாக கழிவுநீர் சாக்கடை கால்வாய் பணிகளை செய்து கொடுத்து சாலை வசதியை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே கடைகளை திறக்க முடியும் என்ற நிலை உள்ளது, என்றனர்.

;