districts

தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் முக்கிய செய்திகள்

இன்று தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் மின்தடை  

தூத்துக்குடி, ஆக.28- தூத்துக்குடி கேவிகே நகர் மற்றும் ஒட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி ஆகஸ்ட் 29 அன்று நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகு திகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.  தூத்துக்குடி பகுதிகள்: போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1ம் கேட், 2ம்கேட், மட்டக்கடை, எட்டையாபுரம் ரோடு, கந்தசாமிபுரம், எழில் நகர், தெப்பகுளம், சிவன் கோயில் தெரு, டபிள்யூ.ஜி.சி.ரோடு, ஜார்ஜ் ரோடு, வி.இ.ரோடு, விவிடி மெயின் ரோடு, அண்ணாநகர், மீனாட்சி புரம், தாமோதரநகர் மற்றும் அதை சுற்றி யுள்ள பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம்இருக்காது. ஒட்டப்பிடாரம் பகுதிகள்: ஒட்டப்பிடா ரம், ஓசநூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங் குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணிய புரம், புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீர பாண்டியாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது விஜயசங்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

குடும்பத்துடன் கஞ்சா வியாபாரி தற்கொலை மிரட்டல்: கைது செய்யாமல் திரும்பிய காவல்துறையினர்

நாகர்கோவில், ஆக.28- குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே நல்ல நாயக்கன் கோணம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி என்ற கஞ்சா அந்தோணி (45). இவருக்கு சுப்புலட்சுமி, ஜாய்ஸ் மேரி என்று இரண்டு மனைவி கள் உள்ளனர். இவர் மீது குமரி மாவட் டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வெளிநாட்டு விமான பணிப்பெண் பாலி யில் வல்லுறவு உட்பட 25 வழக்குகள் நிலு வையில் உள்ளனு. இப்போது குமரி மாவட்டம் முழுவதும் இவர் மூலம் கஞ்சா சப்ளை செய்யப்பட்டு வருவதாக தனிப் படை காவல் துறையினருக்கு  தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வெள்ளியன்று காலை தனிப்படை உதவி ஆய்வாளர் சாம்சன் தலைமையிலான காவல் துறை யினர் அந்தோணி வீட்டை சுற்றி வளைத்த னர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு வீட்டின் ஹாலில் இரண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்துகொண்டார். பின்னர் அவர்கள் மத்தியில் இரண்டு கேஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு காவல் துறையினர் தன்னை பிடித்தால் கேஸ் வெடிக்க வைத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக மிரட் டல் விடுத்தார். மேலும் இதை வீடியோ வாக ரெக்கார்டு செய்து அதை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவ விட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் அந்தோணியை கைது செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

 

நாகையில் சுமைத் துறைமுகம் அமையுமா?

நாகப்பட்டினம், ஆக.28- தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழ னிச்சாமி, நாகப்பட்டினத்திற்கு வியாழக்கி ழமை பிற்பகல், மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு வருகை தந்து, நாகை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற் றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்டத் திட்ட வளர்ச்சிப் பணிகள் பற்றி அதிகாரி கள், வல்லுநர்களுடன் ஆய்வு நடத்தினார்.   பல்வேறு துறைகளின் சார்பில், ரூ.207.56 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.43.60 கோடி மதிப்பி லான நிறைவுபெற்ற 13 திட்டப் பணி களைத் தொடங்கி வைத்தார். 19 பயனாளி களுக்கு ரூ.1.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், கொ ரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது என்பதே தமிழக அரசின் முடிவு. இதனை வலியுறுத்திப் பிரதமருக் குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்புத் தனித் தேர்வர்கள் நிலை அறிவிக்கப்படாமல் இருப்பதற்குக் கார ணம், அவர்கள் தேர்வு எழுதாததே. நாகை மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டத் தின் கீழ், குடிநீர்ப் பற்றாக்குறை விரைவில் போக்கப்படும். நாகையில் பசுமைத் துறைமுகம் அமையும் என்று மறை ந்த முதல்வர் ஜெயலலிதா முன்னர் அறி வித்திருந்தார். இதற்காகத் தனியார் நிறு வனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பப் டது. யாரும் முன்வரவில்லை. இத்திட்டத்தைச் செயற்படுத்த தனியார் நிறுவனங்கள் முன்வந்தால், நாகையில் பசுமைத் துறை முகம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு  சாப்பாடு சரியில்லை: சிகிச்சை பெறுபவர்கள் அதிருப்தி

கும்பகோணம், ஆக.28- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் பகுதியில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள் கும்பகோணம் அருகே உள்ள தனியார் கல்லூரி யில் தங்க வைக்கப்பட்டு  தனி மைப்படுத்தப்பட்டு வருகின்ற னர். இதில் நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள், பொ துமக்கள், தொற்று ஏற்பட்ட வர்கள் என தங்கி  சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர் களுக்கு அரசு அறிவித்த சத்தான நோய் எதிர்ப்பு சக்தியை உரு வாக்க கூடிய உணவுகள் ஏதும் வழங்கப்படவில்லை என்று அதி ருப்தி தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் தங்கியிருக்கும் மையத்தில் இதுபோன்று அதிருப்தி ஏற்படுத்தும் வகை  யில் உணவுகள் வழங்கப்படு வதாக குற்றம் சாட்டப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வா கம், சுகாதார நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவுகளை வழங்க வேண்டும் என கோ ரிக்கை எழுந்து வருகிறது.

ரூ.2 லட்சத்திற்கு ஆண் குழந்தை விற்பனை

திண்டுக்கல், ஆக.28- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்து வர் மற்றும் செவிலியர் உட்பட ஏழு பேர் மீது பச்சிளம் குழந்தை யை விற்றது  தொடர்பாக தூத்துக் குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவ லர் பி.ஜோதிகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் சிறார் நீதிச் சட்டம் (குழந்தைகளின் பரா மரிப்பு மற்றும் பாதுகாப்பு), 2015- இன் கீழ் ஈரால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது பற்றிய விபரம் வருமாறு: திண்டுக்கல்லைச் சேர்ந்த பாண்டி செல்வம் மனைவி பஞ்சவர்னத் திற்கு ஜூன் 2-ஆம்  தேதி அங்குள்ள உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தை யை தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ ஈராலில் ஒரு தம்பதியினருக்கு விற்றுள்ளார். இது தொடர்பாக 1098 என்ற ஹெல்ப்லைன் மூலம் குழந்தை கள் பாதுகாப்புக் குழுவுக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. குழந் தைகள் பாதுகாப்புக்குழுவினர் கீழ ஈராலில் விசாரணை நடத்தி யதில் அக்குழந்தை சின்னதுரை- ஜெசிந்தா தம்பதியினர் பிறந்த குழந்தையை தங்கள் பாது காப்பில் வைத்திருப்பதைக் உறுதி செய்தனர். இதையடுத்து காவல்துறையில் அளித்த புகா ரின் பேரில்,   “சட்டவிரோத தத் தெடுப்பு” சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையில்லாத சின்ன துரை-ஜெசிந்தா தம்பதியினர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தரகர் மூலம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகி குழந்தையை ரூ. இரண்டு லட்சத்திற்கு வாங்கியுள்ளனர். அதில் ஒரு லட்சம் ரூபாயை மருத்துவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறை யினர் சின்னதுரை, ஜெசிந்தா, பாண்டிசெல்வம்  பஞ்சவர்ணம், தூத்துக்குடியைச் சேர்ந்த ரமேஷ். சலீமா மற்றும் ராஜேஸ்வரி (மருத்துவர் மற்றும் செவிலியர்) மீது வழக்குப் பதிவு செய்துள் ளனர்.

கோவிட் எட்டு மடங்கு அதிகரித்தாலும் சுகாதார ஏற்பாடு உள்ளது : முதல்வர் பேட்டி

திருவனந்தபுரம், ஆக.28- கோவிட் தொற்று நோயின் ஒரு முக்கியமான கட்டத்தை கேரளம் கடந்து செல்கிறது. தற்போதைய நிலைமை எதிர்பாராதது அல்ல. இப்போது இருப்பதை விட எட்டு மடங்கு நோயாளிகளை சமாளிக்கும் சுகாதார வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.   இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: நாட்டிலேயே முதலில் கோவிட் கண்டறி யப்பட்ட பகுதி என்றாலும், இந்த நோய் உச்சத்தை எட்டாமல் கட்டுப்படுத்த கேரளத்தால் முடிந்தது. இறப்பு எண்ணிக்கை பத்து லட்சத்தில் எட்டு என்கிற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளின் சிறந்த செயல்பாடு மற்றும் மக்களின் ஒத்துழைப்பு மூலம் இது சாத்தியமானது என்று செய்தி யாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் ர் கூறினார். இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தென்னிந்தியாவிலும் நோய் பரவில் உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள். 5107 மரணங்கள். தமிழ்நாட்டில் சுமார் நான்கு லட்சம் நோயா ளிகள். ஏழாயிரம் மரணங்கள். கர்நாடகாவில், பத்து லட்சத்தில் 82 பேர் இறக்கின்றனர், தமிழகத்தில், பத்து லட்சத்தில் 93 பேர் கோவிட் நோயால் இறக்கின்றனர். இங்கேயும் அப்படியே இருந்திருந்தால், ஆயி ரக்கணக்கானோர் இறந்திருப்பார்கள். மக்கள் தொகை  அடர்த்தி மற்றும் வயதான மக்கள் தொகை அடிப் படையில் இந்த மாநிலங்களை விட கேரளா முன்னணி யில் உள்ளது. நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்கள் அதிகம் உள்ளன. ஆனாலும் நோய் பரவுதலும் இறப்பும் கட்டுப்பாட்டில் உள்ளன. நோயின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால் சுகாதாரத் துறை பலப்படுத்தப் பட்டது. தற்போது 155 முதலுதவி மையங்கள் (சி.எப்.எல்.டி.சி) உள்ளன. 21,700 படுக்கைகளில் பாதி காலியாக உள்ளன என்று முதல்வர் கூறினார்.

சொப்னாவுடன் நீண்ட கால தொடர்பு ஜனம் டிவி அனில் நம்பியார் வாக்குமூலம்

கொச்சி, ஆக.28- தங்க கடத்தில் வழக்கில் இரண்டாவது குற்றவாளி யான சொப்னாவுடன் தனக்கு நீ்ண்டகால தொடர்பு உள்ள தாகவும், கடத்தல் தங்கம் சிக்கிய பிறகு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் சுங்கத் துறை அதிகாரிகளின் கேள்வி களுக்கு அனில் நம்பியார் பதிலளித்துள்ளார். தங்கம் கடத்தி வரப்பட்ட தூதரக பார்சலை சுங்கத் துறையிடமிருந்து மீட்ப தற்கு யுஏஇ தூதரகத்தின் அட்டாசே உள்ளிட்டோருடன் கருத்து பரிமாற்றம் நடத்திய தையும் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அனில் நம்பியார் ஒத்துக்கொண் டார். தங்க கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளி சரித் மூலம் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு தான் சொப் னாவுடன் அறிமுகம் ஏற் பட்டது என அனில் தெரிவித் துள்ளார். இது சொப்னாவின் வாக்குமூலத்திலும்உள்ளது. தொலைக்காட்சி செய்தி யை பார்த்த பிறகே தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக சொப்னாவை அழைத்ததாக அனில் கூறினார். ஆனால், சொப்னாவின் ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறப்படும் முக்கியமான பலவற்றுக்கு பதிலளிக்காமல் மவுனமாக இருந்துள்ளார். ஐந்து மணி நேரம் நீண்ட விசாரணை க்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர் மீ்ண்டும் எப்போது தேவைப்பட்டாலும் விசார ணைக்கு ஆஜராக வேண்டும் என சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க கடத்தல் வழக்கில் மேலும் நால்வர் கைது

கொச்சி, ஆக.28- கேரளாவில் தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் மேலும் 4 நபர்களை தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது. கோழிக்கோடைச் சேர்ந்த சி.வி. கிப்சல், முகம்மது அப்து ஷமீம்,  மலப் புரத்தைச் சேர்ந்த பி.அபூபக்கர், பி.எம்.அப்துல்ஹமித்  ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நால்வரும் தங்கக் கடத்தல் சதியில் ஈடுபட்டதாகவும், தங்கக் கடத்த லில் பணத்தைமுதலீடு செய்துள்ளதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.  கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களின்பல்வேறு பகுதிகளில் உள்ள நகைகள் மற்றும் வீடுகளில் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.அபுபக்க ருக்குச் சொந்தமான கோழிக்கோட்டில் உள்ள மலபார் ஜூவல்லரி, அப்துல் ஹமீதுக்கு சொந்தமான மலப்புரத்தில் உள்ள அமீன் கோல்ட், சம்சுதீனின் கோழிக்கோட்டில் உள்ள அம்பி ஜூவல்லரி ஆகிய இடங்களில்இந்த சோதனை நடத்தப்பட்டது. என்ஐஏ பதிவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 25 நபர்க ளில் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.