திருப்பூர், பிப்.13 - திருப்பூர் பி.என்.சாலையில் புது பஸ் நிலையம் பகுதியில் இருந்து போயம்பா ளையம் பகுதி வரை சாலையை செப்ப னிடுவதற்காக பழைய தார் சாலையைப் பறித்துவிட்டு 10 நாட்களுக்கு மேலாகி யும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் படாமல் உள்ளது. திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த புதிய பேருந்து நிலை யம், பிச்சம்பாளையம், போயம்பாளை யம் வரை சாலை பறிக்கப்பட்டு பத்து நாட்களுக்கு மேலாக சீரமைப்பு பணி கள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இச்சாலை ஏற்கனவே பாதாள சாக்கடை பணிகளுக்காக மூன்று மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. அதன் பின் சாலைகள் முழுமையாக சீரமைக்கப்ப டாமல் இருந்தது. இதையடுத்து குழாய் பதிப்பிற்காக மீண்டும் சாலை தோண் டப்பட்டு, குழிகள் மட்டும் தார் ஊற்றி மூடப்பட்டது. இதை முழுமையாக சீர மைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது மீண்டும் சாலைகள் பறிக்கப்பட்டு பத்து நாட்க ளுக்கு மேலாகியும் இன்னும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், திருப்பூர் பிஎன் சாலை முக்கியமான சாலை. மாணவ மாண விகள், வேலைக்கு செல்லும் தொழிலா ளர்கள், பனியன் நிறுவன வாகனங்கள், லோடு வண்டிகள் என தினந்தோறும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வரும் சாலை. இச்சாலை கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாகவே குண்டும் குழியுமாக உள் ளது. அரசு அலுவலர்களிடம் கேட்டால் பாதாள சாக்கடை பணி, குழாய் பதிப்பு என வித, விதமாக காரணம் கூறுகின்ற னர். காலை மற்றும் மாலை நேரங்களில் இதனால் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்படுவதுடன், அடிக்கடி இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலை யில், தற்போது சாலையைப் பறித்து வைத்துள்ளனர். 10 நாட்களுக்கு மேலாக இப்படி உள்ளது. நேற்றுகூட (புதன்) ஒரு தம்பதியினர் கீழே விழுந்து விட்டனர். எனவே உடனடியாக இச்சா லையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செய லாளர் ஆர்.காளியப்பன் கூறுகையில், பி.என்.சாலை மாநகரின் முக்கிய சாலை யாக மட்டுமில்லாமல், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளி மாவட் டங்களுக்கு செல்லும் பிரதான சாலை யாகவும் உள்ளது. போக்குவரத்து நெரி சல் அதிகம் உள்ள இச்சாலையை சீரமைக்க வேண்டும் என கட்சியின் சார்பில் நெடுஞ்சாலை துறையிடம் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளா மல் உள்ளனர். எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் இச்சாலையை சீரமைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.