districts

திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1200 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

திருப்பூர், ஏப். 30- உணவு பாதுகாப்புத் துறை ஆணை யர் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறி வுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி,  தங்கவேல், பாலமுருகன், ஸ்டாலின் பிரபு, சிரஞ்சீவி மற்றும் ரகுநாதன் ஆகி யோர் அடங்கிய குழுவினர் மூன்று  குழுக்களாக பிரிந்து திடீர் சோதனை யில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட் சிக்கு உட்பட்ட கே.எஸ்.சி ஸ்கூல் ரோடு,  தினசரி மார்க்கெட், அதியமான் வீதி  மற்றும் வெள்ளியங்காடு ஆகிய இடங்க ளில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் செவ் வாய் அன்று காலை திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.  இந்த ஆய்வின்போது மூன்று மாம்பழ குடோன்களில் இருந்து சுமார் 1.2 டன் (1,200 கிலோ) அளவிலான மாம்பழங்கள் வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க  வைக்கப்பட்டவை பறிமுதல் செய்யப் பட்டன. இந்தப் பழங்கள் மாநக ராட்சி உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப் பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இது  தொடர்பாக 3 மொத்த விற்பனை நிலை யங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட் டது. மேலும் 3 மாம்பழ உணவு மாதிரி கள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அரசு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இது தொடர்பாக நியமன அலுவலர்  கூறுகையில், பழங்களை இயற்கை யான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும். எத்திலின் ரசாய னத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படியாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது. சரியான முறை களை பயன்படுத்தி மட்டுமே பழங்க ளைகளை பழுக்க வைக்க வேண்டும்.  கால்சியம் கார்பைடு அசிட்டலின் போன்ற ரசாயனங்களை வைத்து பழங் களை செயற்கையான முறையில் பழுக்க வைக்கக் கூடாது. இவ்வாறு செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் சாப்பிட்டால் தோல் அலர்ஜி, வயிற்று வலி, வயிற் றுப் போக்கு, வாந்தி ஏற்படும். இதுகு றித்து, மாம்பழ விற்பனை உரிமையா ளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. மேலும்,  உணவு புகார் தொடர் பாக 94440 - 42322 என்ற வாட்ஸ் அப்  எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என  உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையி னர் தெரிவித்தனர்.