திருமுருகன் பூண்டி ஆணையர் மாற்றம்
அவிநாசி, நவ.20- திருமுருகன்பூண்டி நகராட்சியில் நகர மன்ற உறுப்பி னர்கள் ஆணையரை மாற்றம் செய்ய வலியுறுத்தி வந்த நிலையில், நகரமன்ற ஆணையர் மாற்றம் செய்யப்பட் டுள்ளார். திருமுருகன்பூண்டி பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பு ஏற் றத்தை தொடர்ந்து திருமுருகன் பூண்டி நகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று 27 வார்டுகளுக்கும் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நகர மன்ற ஆணையர் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என தெரி வித்த நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையர் சம்சுதீன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள் ளார்.
முதியவர் பலி
தருமபுரி, நவ.20- தருமபுரி மாவட்டம், அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொட்டியம்மாள் (75). இவர் வங்கி அருகே நடந்து சென்று போது வேன் மோதியது. அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.
சலுகை விலையில் பிரியாணி அலை மோதிய கூட்டத்தை கட்டுப்படுத்திய போலீசார்
திருப்பூர், நவ.20 - திருப்பூரில் பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு சலுகை விலை யில் பிரியாணி விற்பனை செய்யப் பட்டதால் கூட்டம் அலைமோதியது. போலீசார் அங்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இங்கு ஒரு மணி நேரத்தில் 200 கிலோ பிரியாணி விற்று தீர்ந்தது. திருப்பூர், மங்கலம் சாலை பழக் குடோன் பேருந்து நிறுத்தம் அருகே புதி தாக பிரியாணி கடை ஒன்று ஞாயிற்றுக் கிழமை திறக்கப்பட்டது. இந்த கடை திறப்பு விழா சலுகையாக 100 ரூபாய்க்கு 1 கிலோ சிக்கன் பிரியாணி, 100 கிராம் சில்லி, 2 அவித்த முட்டை என அறிவிக் கப்பட்டது. இதனால் கடை திறந்த உடன் ஏராள மானோர் குவியத் துவக்கினர். முக்கிய சாலையில் கடை அமைந்திருந்ததால் கடைக்கு வந்த கூட்டம் சாலையிலும் நின்றதால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக தகவலறிந்து விரைந்து சென்ற மத்திய காவல் நிலைய போலீசார் கூட்டத்தை கட்டுப் படுத்தி சாலையோரம் வரிசையாக நிற்க வைத்தனர். போதிய ஏற்பாடுகள் செய்த பின்னர் சலுகை அறிவிக்க வேண்டும் என கடை உரிமையாளருக்கு அறிவு றுத்தினர். முதல் நாளில் 200 கிலோ பிரியாணி செய்த நிலையில் ஏராள மானோர் கூடியதால் 1 மணி நேரத்தில் மொத்த பிரியாணியும் விற்பனை யானது. இதனால் பலர் ஏமாற்றத் துடன் திரும்பி சென்றனர். இதனையடுத்து அதே சலுகை விலையில் மீண்டும் பிரியாணி தயார் செய்து ஞாயிறு முழுவதும் வழங்கப் படும் என கடை உரிமையாளர்கள் தெரி வித்தனர். இதனையடுத்து பலர் மீண்டும் முன்பதிவு செய்தும் அதே இடத்திலும் காத்திருக்க துவங்கினர்.
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
கோவை, நவ.20- அரியானா மாநிலத் தைச் சேர்ந்தவர் குறிஜித் சய்யது (45). இவர் அரியா னாவிலிருந்து கண்டெயினர் லாரியில் மாட்டு தீவனங் களை ஏற்றி கோவை வந்தார். தீவனங்களை இறக்கிவிட்டு அரியானா திரும்பியப் போது சூலக்கல் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது, லாரியின் மேலே மின் சார ஒயர் உரசியது. அதனை குறிஜித் சய்யது மரக்கட்டை யால் நகர்த்தியபோது, மின் சாரம் தாக்கியதால் பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
பர்கூர் காவல் நிலையத்தில் ஆய்வு
ஈரோடு, நவ.20- பவானி துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் பர்கூர் காவல் நிலையத்தில், கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்து சாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஏ.சசிமோகன், சத்தியமங்கலம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அய் மன் ஜமால், கோபிசெட்டி பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ஏ.சியா மளா தேவி ஆகியோர் உடனி ருந்தனர்.