districts

img

காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

அவிநாசி, பிப்.19 - காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த மூன்று பேரை  தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். திருப்பூர்  மாவட்டம்  அவினாசி - சேயூர் நடுவச்சேரி பகு தியைச் சேர்ந்த செல்வமணி என்பவர், கருக்கம்பாளையம் நால் ரோடு அருகே தனது காதலியுடன் சம்பவத்தன்று இரவு  காட்டுப் பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப் போது அங்கு வந்த வாலிபர்கள் மூன்று பேர் திடீரென காதல்  ஜோடியை மிரட்டி அவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த  பணத்தை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த  செல்வமணி சேவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீஸ்  இன்ஸ்பெக்டர் அமுல்  ஆரோக்கியதாஸ், தலைமையில் தனிப்படை போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். இதில் கானாங்குளத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் நடுவசேரி கார்த்திக், வடுகபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் ஆகிய மூன்று பேர் இந்த குற்றச் செய லில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள்  மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  மேலும் அவர்களிடம் இருந்து பணம், மோட்டார் சைக்கிளை  பறிமுதல் செய்யப்பட்டது.