உடுமலை, ஏப்.18- உடுமலையில் நோயாளிகள் சங்கத்தின் கூட்டம் பல மாதங்கள் நடைபெறாமல் உள்ளதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டிருந்தன. இதையடுத்து சங்கக் கூட்டம் திங்க ளன்று நடைபெற்றது. உடுமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்கத்தின் கூட்டம் நடைபெறுவது இல்லை. இதனால் நோயா ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடியாமல் மருத்துவமனை இருகிறது என்று ஏப்ரல் 3 ஆம் தேதி தீக்கதிர் செய்தி வெளியிட்டது. இதைதொடர்ந்து, உடு மலை அரசு மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்கத் தின் தலைவர் வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் 17 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவமனைக்கு தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை விரைவில் செய்து முடிக்கவும், மருத் துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்கவும், அனைவ ரும் பயன்படுத்தும் வகையில் தனி சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, இந்த கூட்டத்தில் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உமா மகேஸ்வரி, நகரமன்ற தலைவர் மத்தீன், நகரமன்ற உறுப்பினர்கள் ஆறுச்சாமி, அர்ஜுனன் மற் றும் உடுமலை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.