வாலிபர் சங்கம் புகார் எதிரொலி பட்டாசு கடையில் மாமுல் கேட்ட காவலர் ஆயுதபடைக்கு மாற்றம்
சேலம், அக்.28- சேலம் பகுதியிலுள்ள பட்டாசு கடையில் லஞ்சம் கேட்ட காவலர் மீது வாலிபர் சங்கத் தினர் அளித்த புகாரைத்தொடர்ந்து, அந்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளார். சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணி யாற்றியவர் கண்ணையன் (45). இவர் அம்மாப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பட்டாசு கடைகளில் வசூல் வேட்டை நடத்தியதாக புகார் எழுந்தது. இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். மேலும், அதிகாரிகளுக்கும் அனுப்பினர். இதையடுத்து இதுகுறித்து விசாரிக்கும்படி சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி, அம்மாப்பேட்டை உதவி ஆணையர் சரவணகுமரனுக்கு உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து சரவணகுமரன் விசாரித்து அளித்த அறிக்கையின்படி, காவலர் கண்ணையன் அதிரடியாக ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற் கான உத்தரவை மாநகர துணை ஆணையர் மாடசாமி அளித்தார்.
சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம்
சேலம், அக்.28- உலக சிக்கன நாளை முன்னிட்டு சனியன்று சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, அக்.30 தேதியன்று உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சனி யன்று சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது. ஒருவர் தனது சராசரி தேவைகளுக்கு பிறகு சேமிக்கும் சிறிய பணமும் சேமிப்பாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் சேமிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய அஞ்சலகங்களின் சேமிப்பு கணக்கு சிறந்ததாகும். அஞ்சலகத்தில் எல்லா பிரிவினர், வயதின ருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்ப மாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை. இதுவரை அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறாத பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிய முறையில் கணக்கு தொடங் கலாம். எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள் ஏற்ற வேறு திட்டத்தில் சேர்ந்து கூடுதல் பயன்பெற வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அனைத்து பெரிய தபால் அலுவலகங்களிலும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு கவுன்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு, அக். 28- தமிழ்நாடு முதலமைச்சரால் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு அல்லது தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை உயர்கல்வி 2,3 மற்றும் 4ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயன் அடைந்துள்ளனர். முத லாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற https://www.pudhumaipenn.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வலைதளத்தில், மாணவி கள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப் பிக்கக் கூடாது. விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல் படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809; 91500 56805; 9150056801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.
மரம் வெட்டியவருக்கு அபராதம்
ஈரோடு, அக்.28- அந்தியூரை அடுத்த தட்டக்கரை வனப் பகுதியில் தேக்குமரம் வெட்டிவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், ஊகி யத்தைச் சேர்ந்வர் நாக ராஜு (39). இவர், பர்கூர் மலைப்பகுதியில் தட்டக் கரை வனச் சரகத்தில் தேக்கு மரத்தை வெட்டிக் கடத்த முயன்றுள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் தட்டக் கரை வனத் துறையினர் நாக ராஜு மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, வனப் பகுதியில் புகுந்து தேக்கு மரத்தை வெட்டிய நாகராஜுவுக்கு மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சூதாட்டம்: 5 பேர் கைது
ஈரோடு, அக். 28- கடத்தூர் காவல் நிலைய எல்லையில் சேவல்களை வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம், கடத் தூர் அருகே உள்ளது குரங் காட்டு தோட்டம். இப்பகுதி யில் உள்ள பள்ளத்தில் நம்பியூர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (24), எலத்தூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன சுந்தரம் (22), மதன்குமார் (25), கோகுல் (22) மற்றும் குறவன்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (23) ஆகியோர் 2 சேவல் கள் மற்றும் பணம் ரூ.950 வைத்து சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். அப் போது அங்கு சென்ற கடத்தூர் காவல் துறை யினர் சேவல்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து அவர்களைக் கைது செய் தனர்.
மத்திய உளவுத்துறை செயலிழந்து விட்டது- கே.சுப்பராயன் எம்.பி.,
கோவை, அக். 28 - கோவை கார் வெடிப்பு சம்ப வத்தில் மத்திய உளவுத்துறை செய லிழந்து விட்டதை காட்டுவதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் குற்றஞ்சாட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் கோவை யில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவையை பொறுத்தவரையில் மிகவும் துரதிஷ்டவசமான ஒரு சம் பவம் கடந்த 23 ம் தேதி நடைபெற் றுள்ளது. காரில் இருந்த சிலிண்டர் வெடிக்கப்பட்ட நிலையில் விபத்து நடைபெற்றது. இதனை தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக நடவ டிக்கை எடுத்து வந்தது, அது சம்பந் தமாக சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு இருக் கிறார்கள். எக்காரணத்தை கொண்டும் நிரபராதிகள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு விடக் கூடாது. விருப்பு வெறுப்பு இல்லா மல் கண்டறிந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இஸ்லாமிய பெயர் வைத்து இருப்பதாலேயே அவர்கள் குற்றவாளிகளாக பார்க் கின்ற பார்வை தவறானது. அப்படிப் பட்ட கருத்தோட்டத்தை பாஜக, சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு இட்டுக்கட்டி புனைந்து வருகிறது. அத்தகைய சதி வலைகளில் காவல் துறை விழுந்து விடக்கூடாது. குற்ற வாளிகள் கண்டறியப்படும் போது அந்த சமூகத்தை குற்றம் கண்ணோட் டத்தோடு அணுகுவது தவறானது, ஆபத்தானது. இந்தியாவில் தீவிர வாத தன்மையை என்பது இந்துத் துவ தீவிரவாதிகளிடமும் இருக் கிறது. இஸ்லாமிய பகுதிகளில் இருந்தும் சில சம்பவங்கள் நடை பெறுகின்றன. இதற்கான காரணிகள் என்ன என்பதை கண்டறிந்து அதற்கு விடை காண வேண்டும். ஒரு சென்சிட்டிவ் சென்டர் என்ற முறையில் கோயம்புத்தூர் மத்திய புலனாய்வுத் துறை கண்காணிப்பில் இருக்கிறது. ஆனாலும் கூட மத்திய புலனாய்வுத் துறை ஏன் இதை கண்டறியவில்லை. மத்திய உளவுத்துறைகள் செயல் இழந்து விட்டன என்பதை தான் இந்த சம் பவம் காட்டுகிறது. பாஜக கடை அடைப்பு நடத்த அழைப்பு விடுத் துள்ளது. இந்த நிமிடம் வரை அமைதியாக இருக்கின்ற கோயம் புத்தூரில், ஒரு கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு தான், இந்துத்துவ அமைப்புகள் இந்த கடைய டைப்புக்கு அழைப்பு விடுத்திருக் கின்றன என்று நான் கருதுகிறேன் என்றார். இந்த பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் சி.சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கடன் வாங்கிய தறித்தொழிலாளி கடத்தல்: கந்து வட்டிக்காரர் கைது
திருப்பூர், அக். 28 - திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் குமரிக்கல்பாளை யத்தை சேர்ந்தவர் பகவதி (45). தறித் தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் செங்குட்டை முருகபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி (55) என்பவரிடம் ரூ. 40 ஆயிரத்தை கந்துவட்டிக்கு ஓராண்டுக்கு முன்பு கடன் பெற் றுள்ளார். இந்நிலையில் பகவதி கடன் தொகை மற்றும் வட்டியை முறையாக செலுத்த இயலவில்லை. இது தொடர் பாக கருப்புசாமி பலமுறை கேட்டும் பணம் தராதநிலையில், கடந்த 23ஆம் தேதி பகவதியை, கருப்புசாமி உள்ளிட்ட 3 பேர் கடத்திச் சென்றனர். கருப்புசாமி வீட்டில் பகவதியை அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து எப்படியோ ஏற்பாடு செய்து கடன் பணத்தை பகவதி குடும்பத்தார் செலுத்திவிட்ட னர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக பகவதி குன்னத்தூர் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்படி விசாரித்த போலீஸார் கடத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கருப்பு சாமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூரில் நாளை குடிநீர் விநியோகம் தடைபடும் வார்டுகள்
திருப்பூர், அக். 28 – திருப்பூர் மாநகராட்சிக்கு இரண்டாவது குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கக்கூடிய மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத் தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படு வதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் திருப்பூர் மாநகராட்சி 1ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட 1, 13, 14 ஆவது வார்டுகள் மற்றும் 3ஆவது மண்ட லத்துக்கு உட்பட்ட 44, 45, 50, 51 ஆகிய வார்டுகள், 4ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட 52, 55 ஆகிய வார்டுகள் என மொத் தம் 9 வார்டுகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட பகுதிகளுக்கு திங்கள்கிழமை தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி தெரிவித் துள்ளார்.
நகராட்சி ஒப்பந்த பணியாளர்களுக்கு தரப்படாத போனஸ்: தொழிலாளர் உதவி ஆணையரிடம் சிஐடியு முறையீடு
திருப்பூர், அக். 28 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய் யும் தினக்கூலி பணியாளர்களுக்கு போனஸ் வழங்காத பிரச்சனையில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் தலையிட்டு நடவ டிக்கை எடுக்குமாறு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங் கம் முறையிட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி மற்றும் உடுமலை, தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், பல்லடம், திருமுருகன்பூண்டி ஆகிய ஆறு நகராட்சிகள் திருப்பூர் மாவட்டத்தில் உள் ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சிகளில் தூய் மைப் பணி, குடிநீர் வழங்கல், வாகன ஓட்டு நர் மற்றும் கொசுப்புழு ஒழிப்புப்பணி ஆகிய வற்றில் ஒப்பநத் அடிப்படையில் தினக்கூலி பணியாளர்களாக சுமார் 3 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு, இபிஎப் பிடித்தத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைதல் மற்றும் பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த அக்டோபர் 10ஆம் தேதியன்று மாந கராட்சி மற்றும் ஆறு நகராட்சிகளில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சிஐடியு அறிவித்தது. இதையடுத்து திருப் பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் சிஐ டியு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். இதில் போனஸ் வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி யும் போனஸ் வழங்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதேசமயம் மாவட்டத்தில் உள்ள 6 நக ராட்சிகளில் வேலை நிறுத்தமும், 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் காத்திருப்புப் போராட்டம் நகராட்சிகளின் மண்டல இயக் குநர் அலுவலகத்தின் முன்பாக நடைபெற் றது. ஏறத்தாழ ஐந்து மணி நேரத்துக்கு மேலாக காத்திருப்புப் போராட்டம் நடை பெற்ற நிலையில், மண்டல இயக்குந ரிடம் பேசி, பின்பு மாலை 6 நகராட்சிகளின் ஆணையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஒப்பந்த பணியாளர்களுக்கு போனஸ் வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதன் பிறகும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி களில் ஒப்பந்ததாரர்கள் இந்த பணியாளர் களுக்கு போனஸ் வழங்காமல் கால தாமதம் செய்து வந்தனர். இதையடுத்து சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத் தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாந கராட்சி மேயர், ஆணையரிடம் மீண்டும் இக் கோரிக்கை குறித்து புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சியிலும், காங்கேயம் நகராட்சியிலும் ஒப்பந்த பணியா ளர்களுக்கு போனஸ் சட்டப்படி போனஸ் வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில் போனஸ் பட்டுவாடா செய்யப் பட்டது. எனினும் மற்ற நான்கு நகராட்சிகளில் போனஸ் வழங்கப்படவில்லை. இதைய டுத்து தீபாவளி பண்டிகை முடிந்த உடன் 26 ஆம் தேதி தொழிலாளர் உதவி ஆணைய ரிடம் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், ஒப்பந்ததாரர்கள் போனஸ் வழங்கா தது குறித்து முறையீடு செய்தார். இந்த முறையீட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்களுக்கு அழைப்பாணை அனுப்பி பேச் சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், போனஸ் வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை குறித்து சிஐடியு முடிவு செய்யும் என்றும் கே.ரங்கராஜ் தெரி வித்தார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:50.01/60அடி நீர்வரத்து:885கன அடி வெளியேற்றம்:1132கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 82.32/90அடி. நீர்வரத்து:350கனஅடி வெளியேற்றம்:645கன அடி
கொப்பரை ஏலம்
திருப்பூர், அக்.28- வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடந்த ஏலத்திற்கு 1,761 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் விற்பனைக் குக் கொண்டு வந்திருந்த னா். மொத்தம் ரூ. 62 லட்சத் துக்கு கொப்பரை விற் பனை நடைபெற்றது.
விவேகானந்த சேவாலயம் உரிமத்தை ரத்து செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை
திருப்பூர், அக். 28 - திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள விவேகானந்த சேவாலயத்தின் உரி மத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட் டம், திருமுருகன்பூண்டியில் விவேகா னந்த சேவாலய ஆதரவற்ற குழந்தை கள் காப்பகத்தில் 15 சிறார்கள் தங்கி யிருந்தனர். இந்நிலையில் ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் உணவு உட் கொண்ட சிறார்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அக்டோபர் 5ஆம் தேதி இதில் மூன்று சிறுவர்கள் அடுத்த டுத்து உயிரிழந்தனர். காப்பக காவலாளி மற்றும் 11 சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விவே கானந்த சேவாலயத்தை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அத்துடன் இப் பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்த தனி குழுக்களும் அமைக்கப்பட் டன. அமைச்சர் கீதாஜீவன் கூறுகை யில், விவேகானந்த சேவாலயத்தில் குழந்தைகள் தங்குவதற்கு உரிய வசதி இல்லாமல் மோசமான நிலையில் இருந்தது பற்றி குறிப்பிட்டார். மேலும் இந்த காப்பகத்தை ஆய்வு செய்து நடவ டிக்கை எடுக்காத மாவட்ட குழந்தை கள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ் சிதா பிரியா மீதும் நடவடிக்கை எடுக்கப் படும் என கூறினார். அதன்படி மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேவாலயம் வருவாய்த் துறையினரால் பூட்டப்பட்டது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக் கப்பட்டு காப்பகம் குறித்து ஆய்வு செய் யப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின் முடிவில், காப்பாகத்தின் உரிமத்தை ரத்து செய்ய சமூக பாதுகாப்பு துறை இயக்குநர் வளர்மதிக்கு மாவட்ட ஆட் சியர் எஸ்.வினீத் பரிந்துரை செய்தார். இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட் சியர் சு.வினீத் கூறுகையில், விவேகா னந்த சேவாலயத்தில் மூன்று குழந்தை கள் உயிரிழந்த நிலையில், எனது தலை மையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர் பாக சமூக நலத்துறை அமைச்சர் உத்தர வின் கீழ் காப்பகம் பூட்டி சீல் வைக்கப்பட் டது. காப்பகம் சீல் வைப்பதற்கு முன் பாக நடத்தப்பட்ட ஆய்வில், சிறுவர்க ளின் நலனை கருத்தில் கொள்ளாமல் கவனக்குறைவாக காப்பகம் நடத் தப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட் டுள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் தங் குவதற்கு தகுதியற்ற நிலையில் காப்ப கம் இருந்ததும் ஆய்வில் உறுதி செய் யப்பட்டது. எனவே ஆய்வறிக்கை அடிப்படையில் இந்த காப்பகத்தின் உரி மத்தை ரத்து செய்ய சமூக பாதுகாப்பு துறை இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்துள்ளேன் என்றார்.
உர விற்பனையில் ரூ.22 லட்சம் கையாடல்: விற்பனையாளர் கைது
நாமக்கல், அக்.28- திருச்செங்கோடு அருகே உள்ள கொக்கராயன்பேட்டையில் உர விற் பனையில் ரூ.21 லட்சத்து 91 ஆயி ரம் கையாடல் செய்த வழக்கில் விற் பனையாளரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த னர். இந்திய உழவர் உர கூட்டுறவு நிறு வனம் (இப்கோ) கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்களான உரம், பூச்சிமருந்து, களைக்கொல்லி மற்றும் உபகரணங் கள் ஆகியவற்றை இப்கோ இ-பசார் என்னும் துணை நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரு மையத்தை நிறுவி, விவசாயிகளுக்கு அரசாங் கம் நிர்ணயித்த விலையில் விற்பனை செய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே கொக்கராயன் பேட் டையில் செயல்பட்டு வரும் கிளை யில் நாமக்கல்லை சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு (30) விற்பனையாளராக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி திடீரென தனது பணியை ராஜி நாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த தலைமை அலுவலக அதிகாரிகள் கொக்கரா யன்பேட்டை அலுவலகத்திற்கு வந்து தணிக்கை மேற்கொண்டனர். இந்த தணிக்கையின் போது ரூ.30 லட் சத்து 3 ஆயிரத்து 678-க்கு உரம் இருப்பு குறைவாக இருப்பது தெரிய வந்தது. அப்போது சீனிவாசுவிடம் விசாரிக்கையில்,, கரும்பு விவசாயி கள் உரத்தை கடனாக பெற்று சென்று இருப்பதாகவும், விரைவில் விவ சாயிகளிடம் வசூல் செய்து கம்பெ னிக்கு பணத்தை செலுத்தி விடுவ தாகவும் கூறினார். ஆனால் கொஞ் சம் பணத்தை மட்டும் செலுத்திய அவர், மீதமுள்ள பணத்தை செலுத் தாமல் மோசடி செய்யும் நோக்கில் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படு கிறது. இதற்கிடையே அந்த நிறுவனத் தின் மாநில அலுவலர் புன்னம் ராஜீ, நாமக்கல் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி யிடம் புகார் அளித்தார். அதில் சீனி வாசு, உர விற்பனையில் சுமார் ரூ.21 லட்சத்து 91 ஆயிரத்தை கையாடல் செய்து விட்டதாக கூறி இருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் லட்சுமணன், ஆய் வாளர் தெய்வசிகாமணி ஆகியோர் சீனிவாசுவை கைது செய்து விசா ரணை மேற்கொண்டனர்.
தொழிற்சாலை உரிமத்தை புதுபித்திடுக
சேலம், அக்.28- தொழிற்சாலை உரிமம் புதுபிக்க அக்.31 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள தொழிற்சாலைகள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரி வழியாக வரும் அக்.31 ஆம் தேதிக் குள் உரிய உரிமத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்பித்து, 2023 ஆம் ஆண்டிற்கான புதுப் பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலி கேரள எல்லையில் வாகன தணிக்கை தீவிரம்
மேட்டுப்பாளையம், அக்.28- கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்ப வம் எதிரொலியாக தமிழக - கேரள எல்லை யான முள்ளி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடு பட்டு வருகின்றனர். கடந்த அக்.23 ஆம் தேதியன்று கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் எதிரொலி யாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு கள் பலப்படுத்தப்பட்டுள்ள சூழலில் அடர்ந்த வனத்தையொட்டிய தமிழக - கேரள எல்லை யோர வனத்துறை சோதனை சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகி றது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார வனப்பகுதி கேரள வனப்பகுதி ஒட்டியுள்ளதால், இங்குள்ள முள்ளி வனத் துறை சோதனைச்சாவடியில் அனைத்து வாக னங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரு கின்றன. வாகனங்களில் கொண்டு செல்லப் படும் பொருட்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படு கின்றன. பழுதான சிசிடிவி கேமராக்கள் இச்சோதனைச்சாவடி வழியே தமிழகத் தில் இருந்து கேரளா செல்லும் வாகனங் கள் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகத்தி னுள் நுழையும் வாகனங்கள் மற்றும் நபர் கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முக் கியத்துவம் வாய்ந்த முள்ளி வனத்துறை சோதனைச்சாவடியில் வனத்துறையின ரோடு, காவல் துறையினரும் இணைந்தே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். ஆனால், இங்கு காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு கேமராக்கள் பல மாதங்களாக வேலை செய்யாமல் பழுதடைந்து காணப்படுகின் றன. கேரளாவில் இருந்து தமிழகத்தினுள் நுழையும் வாகனங்கள் மற்றும் இங்கிருந்து கேரளாவினுள் செல்லும் வாகனங்களை கண் காணித்து பதிவு செய்ய வேண்டிய இரண்டு சிசிடிவி கேமராக்களும் பழுதாகி இதுவரை சரி செய்யப்படாமல் கிடக்கின்றன. இங் குள்ள வனத்துறைக்கு சொந்தமான சிறிய வகை பழைய மாடல் கண்காணிப்பு கேமராக் கள் மட்டும் தற்போது செயல்பாட்டில் உள் ளன. வனத்தை ஒட்டி இரு மாநிலங்களை இணைக்கும் மிக முக்கிய பகுதியில் காவல் துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள காட்சி களை துல்லியமாக பதிவு செய்யும் நவீன கேமராக்கள் பழுதாகி கிடப்பது சர்ச்சை யாகி வருகிறது. இதனை உடனே சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ஈரோடு, அக். 28- ஈரோடு மின் பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறி யாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்களின் மாதாந் திர குறை தீர்க்கும் நாள் கூட் டம் நவ.2 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு செயற் பொறியாளர் / இயக்குத லும் பேணுதலும்/ நகரியம்/ ஈரோடு கோட்ட அலுவலகத் தில் (948 EVN ரோடு, ஈரோடு-9) நடைபெறும். எனவே ஈரோடு நகர் முழுவதும் கருங்கல்பாளை யம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன் சத்திரம், சம்பத்நகர், திண் டல் அக்ரஹாரம் மற்றும் மேட் டுக்கடை, சித்தோடு, கவுந்தப் பாடி ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற் பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என மின்வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.