districts

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மார்ச் 13- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங் கத்தினர் கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊராட்சி செயலாளர் பணி  விதிகள், சிறப்பு நிலை தேர்வு நிலை அரசாணை, கணினி  உதவியாளர் பணி வரன்முறை மற்றும் ஊதிய மாற்றம் குறித்த  அரசாணைகளை உடனடியாக வெளியிட வேண்டும். உதவி  பொறியாளர், உதவி இயக்குநர், உதவி செயற்பொறியா ளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் சங்கத்தினர் கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி ஊரகவளச்சி திட்ட இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர்  சதீஷ்குமார் தலைமை ஏற்றார். இதில், மாநில துணைத்தலை வர் ஆர்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் ச.இளங் குமரன், மாவட்ட செயலாளர் ப.சங்கர் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் கோரிக் கைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் மேற்கொள்ளும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் முதன்மைச் செய லாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர் அலுவலர்களின் மெத் தனப்போக்கினை கண்டித்தும், நியாயமான கோரிக்கை களை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.