districts

img

மீண்டும் திறக்கப்பட்ட தார்க்கலவை ஆலை

உதகை, மார்ச் 21- உதகை அருகே சீல் வைக்கப்பட்ட தார்க்கலவை ஆலை மீண்டும் திறக்கப் பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி யினர் கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள தேவாலா பகுதியில் பி.ஆர்.சி.சி என்ற தார்க்கலவை ஆலை செயல் பட்டு வந்தது. இந்த ஆலையினால் அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவ சாயிகள் கேன்சர் போன்ற  பலவித மான நோய்களால் பாதிக்கப்பட்டனர். எனவே, இந்த ஆலையை மூட வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்ட னர். இதையடுத்து மாசுகட்டுப்பாடு  அதிகாரிகள் மேற்கண்ட ஆலையை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், பண பலத்தாலும், கோழைத்தனமாண அரசியல் செல்வாக்கை பயன்படுத் தியும் தார்க்கலவை ஆலை திறக்கப் பட்டுள்ளது. இதைக் கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேவாலா பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலா ளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் யோகண்ணன், ராஜன், நகர்மன்ற உறுப்பினர் விஜயா, வாலிபர் சங்க நிர்வாகிகள் சுதர்சன், ரவிக்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்டக்குழு உறுப்பினர் வர்கீஸ் நன்றி கூறினார்.