districts

img

மலைக்கிராமத்திற்கு போதிய சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரை தொட்டில் மூலம் தூக்கி செல்லும் அவலம்

மேட்டுப்பாளையம், பிப்.23- மேட்டுப்பாளையம் அருகே உள்ள மலைக்கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால், உயிரிழந்தவ ரின் உடலை தொட்டில் கட்டி கிராம மக்கள் மூன்று கிலோ மீட்டர் வரை  தூக்கி செல்லும் அவல நிலை ஏற் பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அருகே உள்ள நெல்லித் துறை கிராம ஊராட்சிக்குட்பட்ட கடம்பன்கோம்பை என்னும் மலைக் கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு போதிய தார் சாலை வசதி இல்லாததாலும், இருக் கும் பாதையும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால் இப்பகுதி மக்கள் போக்குவரத் திற்கு சிரமமடைந்து வருகின்றனர். மலைக்கிராம பாதை மோசமான நிலையில் இருப்பதாலும், வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதா லும் வாகன ஓட்டிகள் யாரும் இப் பாதை வழியே செல்ல தயங்குகின் றனர். இதனால் அவசர கால நேரங் களில் ஆம்புலன்ஸ் மற்றும் பிற  வாகனங்கள் வரக்கூடிய அளவிற்கு கூட சாலைகள் இல்லாததால் மக் கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், நெல்லித்துறை பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலை யில், அரசு மருத்துவமனை ஆம்பு லன்ஸ் மூலம் அவரது உடல் நெல் லித்துறை ஊராட்சிக்குட்பட்ட நீராடி கிராமம் வரை கொண்டு வரப்பட் டது. ஆனால், இறந்தவர் இல்லம் கடம்பன் கோம்பை கிராமத்தில் உள்ள நிலையில், மேற்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் இயக்க இய லாது எனக்கூறி அங்கேயே உடலை  இறக்கி விட்டனர். வேறு வாகனங்க ளும் மலைக்கிராம மண் பாதை யில் வரவில்லை என்பதால், அங்கி ருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர்  தூரத்திற்கு அப்பகுதி மக்களே தொட்டில் கட்டி உடலை தோளில்  சுமந்து எடுத்து சென்ற வீடியோ  தற்போது சமூக வலைத்தளங்க ளில் வைரலாக பரவி வருகிறது. எனவே, நெல்லித்துறை ஊராட்சிக் குட்பட்ட மலைக்கிராமங்களில் வாக னங்கள் செல்லும் பாதைகளை சீர மைத்து தார்சாலைகளாக மாற்றித் தர வேண்டும், என மலைவாழ் மக் கள் கோவை மாவட்ட நிர்வாகத் திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.