திருப்பூர், ஜூலை 26 - தாராபுரம் அருகே தாக்குதலில் எலும்பு முறிந்த பெண்ணை திருப்பூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தும் மூன்று நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும், இத னால் மன விரக்தி அடைந்து பாதிக்கப்பட்டவ ரின் குடும்பத்தார் அவரை அங்கிருந்து கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்ததாக தெரிவித்தனர். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கூறியதாவது : தாராபுரம் அருகே புஞ்சை தலையூர் அங்கன்வாடி ஊழியர் சி.ராணி. இவ ரது சகோதரி லட்சுமி (56) இவருக்கு கடந்த ஜூலை 20ஆம் தேதி உறவினர் ஒருவர் தாக்கியதில் காயமடைந்தார். உடனடி யாக தாராபுரம் அரசினர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச் சைக்காக திருப்பூர் அரசினர் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நாள் வைத்திருந்து, 500 ஆம் எண் அறையில் தங்க வைத்தனர். மூன்று நாட்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் என யாருமே வந்து பார்க்க வில்லை என அவரது குடும்பத்தார் தெரிவித் தனர். நான்காவது நாள் சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து மருத்துவர் சந்திரசேகரனிடம் கேட்டபோதும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினர். இதனால் விரக்தி அடைந்த குடும்பத்தார், உடனடி யாக அங்கிருந்து புறப்பட்டு கரூர் தனியார் மருத்துவமனைக்கு லட்சுமியை எடுத்துச் சென்றனர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையின் அவலம் சொல்லி மாளாது. நோயாளிகள் கவ னிப்பாரற்று கைவிடப்படக் கூடிய நிலை உள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண் டும் என்று கூறினர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் முதல்வரின் தனிப்பிரிவு உள்பட அரசுத் துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி இருக்கி றார். இந்த புகாரின் மீது சுகாதாரத் துறையில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என ஆன்லைன் மூலம் பதில் அளிக்கப் பட்டு உள்ளது. அதேசமயம் கரூர் தனியார் மருத்துவம னையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் லட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது இடுப்பு பகுதியில் ஏற் பட்டிருக்கும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் செலவாகும் எனத் தெரிவித் ததாகவும், அவருக்கு இடுப்பு பகுதி யில் பெல்ட் அணிவித்து அசையாத நிலை யில் இருக்கும்படி பரிந்துரைத்து அனுப்பி உள்ளதாகவும் குடும்பத் தார் தெரிவித்தனர். திருப்பூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தபோதே உரிய சிகிச்சை அளித்திருந்தால் இத்தகைய நெருக்கடி நிலையைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர்கள் வேதனையுடன் கூறினர்.
மருத்துவர் பதில்
இந்த சம்பவம் குறித்து லட்சுமி தெரிவித்த புகாரின் மீது அரசு மருத்துவக் கல்லூரி முதல் வர் மருத்துவர் முருகேசன் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசார ணையில், நோயாளி லட்சுமி கடந்த 20ஆம் தேதி காலை 11.40 மணியளவில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து பரிந் துரை செய்யப்பட்டு திருப்பூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்ததாக வும், பரிசோதனை செய்து பார்த்து சிகிச்சை அளித்ததாகவும் பொது அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பதில் அளித்திருக்கிறார். அன்றைய தினமே ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே எடுத்ததாகவும், எலும்பு முறிவு காயம் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். லட்சுமிக்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட் டதாகவும், வலி குறையாத நிலையில், இடுப் புப் பகுதியில் சி.டி. ஸ்கேன் செய்வதற்கு பரிந் துரை செய்து, 23ஆம் தேதி அந்த சி.டி. ஸ்கேன் அறிக்கை பெறப்பட்டது. சி.டி. ஸ்கேன் பார்த்த தில் அவருக்கு வயது சார்ந்த பாதிப்பும், ஆஸ் டியோபோரோடிக் எனப்படும் எலும்பு சார்ந்த பாதிப்பு இருப்பதும் அறியப்பட்டது. எனினும் நோயாளி அன்றைய தினம் இரவு 8.30 மணி யளவில் மருத்துவமனையில் இருந்து வெளி யேறிச் சென்று விட்டார் என்று கூறப்பட்டுள் ளது. மருத்துவ சிகிச்சை அளித்ததில் எந்த கவ னக்குறைவும் இல்லை என மருத்துவர் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து பாதிக்கப்பட்ட நோயாளி லட்சுமி தரப்பில் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து எந்த மருத்துவரோ, செவிலியரோ தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. உரிய முறையில் கவனித்து சிகிச்சை அளிக்க வில்லை என்று கூறினார்.