நாமக்கல்,டிச.6- சட்டமேதை அம்பேத்கரின் 63 ஆவது நினைவு தினம் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. டிச.6 சட்டமேதை அம்பேத்கரின் 63ஆவது நினைவு தினமாகும். இதனையொட்டி நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவிக் கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, ராசிபுரம் வெண்ணந்தூர் பகுதி செய லாளர் ஜீ.செல்வராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப் பினர் பி.ராமசாமி, மாதர் சங்க தலைவர் ராணி, சிஐடியு தலைவர் காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாமக்கல் மாவட்ட குழுவின் சார்பில் திருச்செங்கோடு, வேலூர் சாலை நரிப்பள்ளத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட தலைவர் மே.கணேஷ் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் மாவட்டகுழு உறுப் பினர் சுப்புராஜ், ஆறுமுகம் உள்ளிட்ட திரளானப் பொதுமக்கள் கலந்து கொண்டன.
சேலம்
சேலத்தில் அரசு கல்லூரி அருகில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தைவேல், வடக்கு மாநகர செயலாளர் பி.செந்தில்குமார், மேற்கு மாநகர தலைவர் பி.சக்திவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ், வடக்கு மாநகர தலைவர் பி.சதீஷ்குமார், வடக்கு மாநகர செயலாளர் ஆர்.வி. கதிர்வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் எம். முருகேசன், வடக்கு மாநகர செய லாளர் என்.பிரவீன்குமார், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.
மேட்டூர்
மேட்டூர் பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செய லாளர் வி.இளங்கோ தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகி சி. கருப்பண்ணன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.
ஓமலூர்
ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பி.அரியாக்கவுண்டர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தாலுகா குழு உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி
ஆதித்தமிழர்பேரவை சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் சங்ககிரியில் அனுசரிக்கப்பட்டது. சங்ககிரி ஒன்றிய செயலாளர் ரமேஷ், சங்ககிரி நகர தலைவர் பெருமாள், மாவட்டச் செய லாளர் ஸ்ரீதரன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.
ஏற்காடு
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் திராவிடர் விடுதலை கழகம் மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
பென்னாகரம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பென்னாகரத்தில் டாக்டர் அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. இதில்சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பென்னாகரம் பகுதிக்குழு தலைவர் தேவன், செயலாளர் ரவி, சிபிஎம் சின்னம்பள்ளி பகுதி செயலாளர் ஜி. சக்திவேல், பென்னாகரம் நகர செய லாளர் எஸ்.வெள்ளியங்கிரி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.