districts

img

குழு விளையாட்டுப் போட்டி: ஆட்சியர் துவக்கி வைத்தார்

தருமபுரி, ஜன.13- முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழாவினை முன்னிட்டு, தரு மபுரி மாவட்ட இளைஞர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளை  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பாக முத் தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கான குழு விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக, தருமபுரி மாவட்டத்தில் பெண்களுக் கான குழு விளையாட்டுப் போட்டி கள் மாவட்ட விளையாட்டு அரங்கத் தில் சனியன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார். ஆண்களுக் கான குழு விளையாட்டுப் போட்டிகள் ஞாயிறன்று (இன்று) காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இக்குழு விளையாட்டுப் போட்டிகளில் 17 வயதிற்கு மேற்பட்ட தருமபுரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பயி லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கபடி, கையுந்து பந்து மற்றும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடை பெற உள்ளன. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட விளையாட்டு – இளைஞர் நலன் அலு வலர் தே.சாந்தி, தருமபுரி வட்டாட் சியர் ஜெயசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.