தஞ்சாவூர் செப்.6- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழன் அன்று இலக்கியத் துறையில் ஆசிரியர் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை சார்பாக, ஆசிரியர் நாள் விழா துணைவேந்தர் கோ.பாலசுப்ர மணியன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஒருங்கிணை ப்பாளர் க.திலகவதி வரவேற்றார். மொழிப்புலத் தலைவர் இரா.காமராசு வாழ்த்திப் பேசினார். இந்து தமிழ் நாளிதழ் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் சிறப்புரை ஆற்றினார். ஆய்வு மாணவர் இள.அபிராமி தொகுத்து வழங்கினார். உதவிப் பேராசிரியர் அ.இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.