பள்ளிபாளையம், பிப்.1- தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின், பள்ளிபாளை யம் பொன்னி சர்க்கரை ஆலையின், ஆலை மட்ட கரும்பு விவசாயிகளுடைய கூட்டம் பாப்பம்பாளையம், முனியப்பன் கோவில் வளாகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு செங்கோட்டையன் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்கம் நடத்திய இயக்கங்கள் குறித்து சங்கத்தினுடைய பொதுச் செயலாளர் செ.நல்லா கவுண்டர் அறிக்கை சமர்ப்பித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட செயலாளர் படைவீடு பெருமாள் கலந்து கொண்டார். இதில், கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 4000 அறிவித்திட வலியுறுத்தி கோரிக்கை மனு தபால் இயக்கத்தை தொடர்ந்து நடத்துவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள கரும்பு விவ சாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 17 ஆம் தேதி சென்னை கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடை பெறும் இயக்கத்தில், பொன்னி சர்க்கரை ஆலையில் இருந்து கரும்பு விவசாயிகள் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில், சங்கத்தின் பொருளாளர் நடேசன், வருகை தந்தவர்களுக்கு நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.