கோவை மாவட்டத்தின் நக்கீரன் நிருபராக பணியாற்றிய அருள் குமார் அண்மையில் மறைந்தார். இவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அருள்குமாரின் இணையரிடம் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் வழங்கினார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில் அண்ணா உடனிருந்தார்.