districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்

கோவை, அக்.14- கோவையில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தக ராறில் தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர் காயமடைந்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் (52). இவர் கோவை - திருப்பூர் இடையே இயக் கப்படும் தனியார் பேருந்தில் நடத்துநராக உள்ளார். இவர்  கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஒரு பேருந்து நிறுத் தத்தில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அதன்  பின்னால் வந்த மற்றொரு தனியார் பேருந்து ஓட்டுநருக்கும், பஞ்சலிங்கத்துக்கும் இடையே பயணிகளை ஏற்றுவதில் டைமிங் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற் றியதில் ஆத்திரமடைந்த தனியார் பேருந்து ஊழியர்கள்  பஞ்சலிங்கத்தை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிய தாக தெரிகிறது.  இதில் காயமடைந்த பஞ்சலிங்கம் கோவை அரசு மருத்து  வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், பீளமேடு காவல் துறையினர் வழக்குப்  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு போக்குவரத்துக்கழக  பிஆர்ஓ சந்தேக மரணம்

ஈரோடு, அக். 14- ஈரோடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பிஆர்ஓ  சந்தே கத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கோவை மாவட்டம், குனியமுத்தூர் அருகே உள்ள  ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் சரவணச்செல்வி. இவரது  கணவர் காந்தி (57) ஈரோடு - சென்னிமலை சாலையில்  உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகத்தில்  பிஆர்ஓ-வாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த  13ஆம் தேதி மதியம் சுமார் 2.30 மணியளவில் உடன்  பணியாற்றும் வடிவேல்முருகன் என்பவர் காந்தியை  கைபேசியில் தொடர்பு கொண்டு உடனே புறப்பட்டு ஈரோடு  வருமாறு அழைத்துள்ளார். இதற்கிடையில் சரவணசெல்வி அவரின் வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் தம்பதியர் மற்றும் அவரது தாய் மாமா ஆகியோருடன் ஈரோடு வந்துள்ளார். அங்கு வடி வேல் முருகனின் உதவியுடன் காந்தி தங்கிருந்த ஈரோடு அகில்மேடு வாசுகி வீதியில் உள்ள (குமார சாமி என்பவருக்குச் சொந்த மான ராஜீபில்டிங்கில்) காந்தி  அறைக்குச் சென்றுள்ளார். கதவு உள்தாள் போடப்பட்டிருந்த நிலையில் அறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.  இதனையடுத்து உறவினர் முன்னிலையில் கதவை உடைத்து திறந்து பார்த்த போது கழிவறையில் நிர்வாணமாக  இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சரவணச்செல்வி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

விவசாய நிலம் வாங்க மானியத்துடன் கடன் பெற தாட்கோ அழைப்பு

ஈரோடு, அக்.14- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ நிலம்  வாங்கும் திட்டத்தின்கீழ் விவசாயம் செய்ய நிலம் வாங்க ஈரோடு மாவட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தாட்கோ நிலம் வாங்கும் திட்டத்தின்கீழ் விவசாயம் செய்ய 2.5 ஏக்கர் நஞ்சை மற்றும் 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு,  திட்ட தொகையில் 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக 5  லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தின் கீழ்  நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தெரிவு செய்ய வேண்டும். நிலம்  விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத  பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். சார்பதி வாளர் அலுவலக இணையதளம் வாயிலாக அல்லது நேரில்  நிலத்தின் வழிகாட்டி மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு பெறப்பட  வேண்டும்.  விண்ணப்பம் செய்த மகளிரின் பெயரில் அல்லது மகன் கள் அல்லது கணவர் பெயரில் மட்டுமே வாங்கப்படும் நிலம்  பதிவு செய்யப்பட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வாங்கப் படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 10 வருடங்களுக்கு விற் பனை செய்யக்கூடாது. எனவே, நிலம் வாங்கியவுடன் தாட் கோ மாவட்ட மேலாளரால் 10 வருடங்களுக்கு விற்பனை  செய்யாதவாறு வில்லங்கம் ஏற்படுத்தி தரப்படும். இதில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மகளிருக்கு முன் னுரிமை அளிக்கப்படும். மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். விண்ணப்ப தாரர் 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். அவர் விவ சாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும்.  விவசாயக் கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம். மேலும், விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட் கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றி ருக்கக் கூடாது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி நிலம் வாங்க விண்ணப்ப தாரர் உரிய ஆவணங்களுடன் ஆதிதிராவிடர்கள் (எஸ்சி)  http://application.tahdco.com/home மற்றும் பழங்குடி யினர் (எஸ்டி) http://fast.tahdco.com/home என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.  மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலு வலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 6ஆவது  மாடி, ஈரோடு என்ற முகவரியிலும், அலுவலக தொலை பேசி எண்: 0424 - 2259453 லும் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

ரேசன் அரிசி கடத்தல்

உதகை, அக்.14- பந்தலூர் அருகே ரேசன் அரியை கடத்தியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.  பந்தலூர் தாலுகா பகுதி களிலிருந்து ரேசன் அரிசி  மூட்டைகளை கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பந்தலூர் பஜாரில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ஒரு  காரில் 1,200 கிலோ ரேசன்  அரிசி மற்றும் கார் பறிமுதல்  செய்யப்பட்டது. தப்பிஓடிய வரை போலீசார் தேடி வரு கின்றனர்.

உலக மனநல நாள் விழிப்புணர்வு

சேலம், அக்.14- உலக மனநல நாளையொட்டி, மனநலம் மற்றும் நல வாழ்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேலம் பெரியார்  பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற்றது. சிஐஐ, ரோட்டரி  கிளப் ஆப் சேலம் மிட் டவுன் மற்றும் பெரியார் பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,  சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடைபெற்ற சிந்தனை அரங் கத்தில் மருத்துவர் கு.சிவராமன், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தமிழ்நாடு சிஆர்பிஎப் டிஐஜி அருள்குமார், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்து வக்கல்லூரி முதல்வர் வள்ளி சத்யமூர்த்தி உள்ளிட்டோர் மனநலம் நலவாழ்வு சார்ந்த தலைப்புகளில் உரை யாற்றினர். இதையடுத்து மனநலம், சமூக நலம் சார்ந்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இறுதியாக சேலம் ரோட்டரி தலைவர் வெற்றி வேந்தன் நன்றி கூறினார்.

அடிதடி மோதல்: பாஜக இளைஞரணி செயலாளர் கைது

கோவை, அக்.14- நட்சத்திர ஹோட்டலுக்கு செல்ல அனுமதி மறுத்த நிலையில் அடிதடி தகராறில் ஈடுபட்டு, வைர மோதிரம் காணாமல் போனது. இவ் வழக்கில் தொடர்புடைய பாஜக இளை ஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். கோவை மாவட்ட பாஜகவின் சிறுபான்மை யினர் பிரிவு தலைவர் ஜான்சன். இவர், கடந்த மாதம் தனது மகன் டேவிட்டை அழைத்து கொண்டு  மகனின் பிறந்த நாள் விழாவிற்கு  அரங்கை முன்பதிவு செய்ய கோவை பந்தய  சாலையில் உள்ள பாபீஸ் நட்சத்திர ஹோட் டலுக்கு இரவு சென்றனர். அங்கு ஏற்கனவே திட்டமிட்ட தம்பதிகள் மட்டும் பங்கு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஆகவே தற் போது அனுமதிக்க முடியாது என ஊழி யர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இந்த சண்டையில் டேவிட்டின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் அணிந்திருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம் அந்த களோபரத்தில் காணாமல் போயுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஜான்சன் மற்றும் டேவிட்டை தாக்கியதாக, ஹோட்டல் அக்கவுன்டன்ட் விஷ்ணு பாரதி, பவுன்சர்கள் ரெயின்போ ரமேஷ், பில்லா ரமேஷ், சுதர்சன், முகமது அப்ரிதீன் ஆகி யோர் மீது, 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய் யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தேடப் பட்டு வந்த ரமேஷை போலீசார் வியாழனன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்,  கோவை மாவட்ட பாஜக இளைஞரணி செயலா ளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பேரிடர்  மேலாண்மை: விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, அக்.14- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வியாழனன்று வருவாய்த்துறை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு  நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்விற்கு, மாவட்ட  ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். வருவாய்த்துறை அதி காரி லீலா அலெக்ஸ் முன்னிலை வகித்தார்.  இதில் தீயணைப்பு துறையை சேர்ந்த அதி காரிகள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் புயல்,  மழை, வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது, மீட்பு பணி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது தீ மற்றும் விபத்து, கட்டிடம் இடிந்து விபத்தின் போது சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் முறை விளக்கத் தை தீயணைப்புத் துறையினர் அளித்தனர்.  இதில், கோவை மாநகராட்சி அணையாளர் மு.பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு

கோவை, அக்.14- அசாம் மாநிலத்தை சேர்ந்த அசிகுல் அல் இஸ் லாம் (20) என்பவர் கோவை  பீளமேட்டில் தங்கி அங் குள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வருகிறார்.  இவர் தனது சொந்த ஊரைச் சேர்ந்த நண்பர்களை சந்திப் பதற்காக உக்கடம் லங்கா  கார்னர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு  வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, உனது செல்போனை கொடு, பேசி விட்டு தருகிறோம் என கேட் டுள்ளனர். அவர் கொடுக்க  மறுத்ததால், ஆத்திரமடைந்த 4 பேர் கும்பல் அவரை  தாக்கி அவரிடம் இருந்த ரூ.7  ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இத்தாக்குதலில் காயம டைந்த அசிகுல் அல் இஸ்லா மை அவ்வழியாக சென்ற வர்கள் மீட்டு கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப் பினர். இதுதொடர்பாக உக்கடம் காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து, அந்த நபர்களை தேடி வரு கின்றனர்.

நகைக்கடை துவங்குவதாக கூறி ரூ.1.20 கோடி தங்கம் மோசடி

கோவை, அக்.14- கோவையில் புதிய நகைக்கடை துவங்க போவதாக கூறி  நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.1.20 கோடி மதிப்பி லான தங்கம் வாங்கி மோசடி செய்தவரை போலீசார் கைது  செய்தனர். கோவை மாவட்டம், செல்வபுரம் ராஜரத்தினம் நகரை சேர்ந்தவர் காஜா உசேன் (42), நகைப்பட்டறை நடத்தி வரு கிறார். இவரது நகைப்பட்டறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்  9ஆம் தேதியன்று கோவை ஆர்.ஜி.தெருவை சேர்ந்த விஜய குமார் (42) என்பவர் வந்துள்ளார். அவர் காஜா உசேனிடம்  தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, நான் தற்போது நகைப் பட்டறை நடத்தி வருவதாகவும், விரைவில் கோவையில்  புதிய நகைக்கடை துவங்க உள்ளதாகவும் தெரிவித் துள்ளார். மேலும் தங்க நகை ஆபரணங்களை கொடுத்தால்,  அதற்குரிய பணத்தை விற்பனை செய்து கொடுப்பதாக தெரி வித்துள்ளார். அவரது பேச்சை நம்பிய காஜா உசேன் 9.8.2022  முதல் 3.9.2022 வரை ரூ.1.20 கோடி மதிப்பிலான 3,306.140  கிராம் தங்க நகைகளை கொடுத்துள்ளார். ஆனால், அவர்  கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. காஜா உசேன், பணத்தை அல்லது நகைகளை திருப்பி தருமாறு பல முறை கேட்டும், விஜயகுமார் உரிய பதில் அளிக்காமல் காலம்  தாழ்த்தி வந்துள்ளார்.  இந்த மோசடிக்கு விஜயகுமாரின் மனைவி விஜய குமாரியும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இது குறித்து காஜா உசேன், வெறைட்டி ஹால் ரோடு போலீசில்  புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் விஜயகுமார், அவரது மனைவி விஜயகுமாரி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, விஜயகுமாரை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

காதலர்களை மிரட்டி பணம் பறித்த  3 காவலர்கள் பணியிடை நீக்கம்

திருப்பூர், அக். 14 - திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கடந்த 17 ஆம் தேதி சாலையோரம் காரை நிறுத்தி காதலர்கள் இருவர்  பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற பெருமா நல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் தனபால்  (30), கதிரவன் (27), தமிழ் (33) ஆகிய மூவரும் அவர்களிடம்  சோதனை செய்வது போல காட்டிக் கொண்டு, மிரட்டி ரூ.34  ஆயிரத்து 500 பணம் பறித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட  காதலர் நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்  சாயிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் விசாரணை  மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர், காதலர்களை மிரட்டி பணம் பறித்த மேற்கண்ட மூன்று காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

திருப்பூர், அக். 14 - திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவல கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை  நடத்தினர்.   ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் வட்டாட்சி யர் அங்கு இல்லை. அவர் விடுமுறையில் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் துணை வட்டாட்சியர் உள்ளிட்ட முக் கிய அதிகாரிகள் இல்லாத நிலையில், இந்த சோதனையில் ரூ. 80 ஆயிரத்து 70 கணக்கில் வராத தொகை பறிமுதல் செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் மூலம் ரூ.1.07 கோடி பறிப்பு: மீட்டுக்கொடுத்த சைபர் கிரைம் போலீசார்

திருப்பூர், அக். 14 -  திருப்பூர் மாநகரம். மங்கலம்சாலை, சஹானா குளோத் திங் என்ற தனியார் நிறுவனத்தில் வணிக மின்னஞ்சல் மூல மாக கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி ரூ. 1 கோடியே 7 லட்சம் பறிக்கப் பட்டது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு  மேலாளர் சீனிவாசன் மே 25ஆம் தேதி தேசிய சைபர் கிரைம்  முறையீட்டு இணையதளத்தில் புகார் பதிவு செய்தார். இதன் படி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வணிக மின்னஞ்சல் மூலமாக கையாடல் செய்யப் பட்ட மொத்த தொகையும் அமெரிக்காவின் பிஎன்எஸ் என்ற  வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. மனுதார ரின் வங்கியான எச்டிஎப்சி வங்கியுடன் தொடர்பு கொண்டும்,  துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இதன் தொடர்ச்சி யாக, கையாடல் செய்யப்பட்ட பணமானது வங்கியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் அக்டோபர் 12 ஆம் தேதி  சஹானா குளோத்திங் நிறுவன வங்கி கணக்கில் முழு தொகையும் வரவு வைக்கப்பட்டது. இவ்வழக்கினை சிறப்பாக கையாண்டு உரிய நடவடிக் கைகள் மேற்கொண்டதற்காக திருப்பூர் மாநகர சைபர் கிரைம்  காவல் ஆய்வாளர் சொர்ணவள்ளி, உதவி ஆய்வாளர் ரபிக்  சிக்கந்தர் மற்றும் காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சா.பிரபாகரன் பாராட்டினார். பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து இதுபோல கையாடல் செய் யப்பட்டது தெரிந்தவுடன் உடனடியாக 1930 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் என்சிஆர்பி இணையத்தை தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்து கொள்ளும்படி கேட் டுக் கொண்டார். மேலும் இது பண்டிகை காலம் என்பதால் இத்தகைய சம்ப வங்கள் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளதால் மக்கள் விழிப் புடன் இருக்க வேண்டும் எனவும், இது போன்ற சம்பவங் கள் நடைபெறும் பட்சத்தில் உடனடியாக காவல் துறைக்கு தக வல் தெரிவிக்குமாறும் ஆனையர் கூறியுள்ளார்.

ஆவணங்கள் இன்றி தங்கிய வங்க தேசத்தினர் ஐவர் கைது

திருப்பூர், அக். 14 - திருப்பூரில்  உரிய ஆவணங்கள் இன்றி தங்கி பணியாற்றி  வந்த வங்க தேசத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல் துறையி னர் கைது செய்தனர்.  திருப்பூர் மாநகரம், மங்கலம்சாலை, சோதனச்சாவடியில்  சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி திரிந்த இளைஞர்கள்  ஐந்து பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்த னர். இதில் அவர்கள் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும்,  அவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதுமில்லை என்பதும் தெரி யவந்தது. அவர்கள் போலியான முறையில் ஆதார் அட்டை  உள்ளிட்ட இந்திய ஆவணங்களை முறைகேடாக பெற்றது  தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் மத்திய  காவல் நிலைய போலீசார் அந்த இளைஞர்கள் ஐந்து பேரை யும் கைது செய்தனர். ரஷீத் செய்க், முகம்மது சோகித், ரஷீத் துல், மிஷான் கான், சுமன் மஜூம்தார் ஆகிய ஐந்து பேரும்  சிறை வைக்கப்பட்டனர்.

அரசுப்பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள்

திருப்பூர், அக். 14 - செல்லம்மாள் காலனி ஊராட்சி ஒன்றியத்  தொடக்கப் பள்ளி மாணவர்களின் பயன்பாட் டிற்காக ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள 18 பெஞ்ச்  மற்றும் 80 நாற்காலிகள் வழங்கப்பட்டன. சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீமகேஷ்  வித்யாலயா பள்ளியின் தாளாளர் என்.சந்தி ரசேகரன் இதை வழங்கினார். திருப்பூர் மாநக ராட்சி 24 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் இரா.நாகராஜ் பெற்று கொண்டு, பள்ளித் தலைமையாசிரியர் வே.நாகராஜ் கணேஷ் குமாரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலை வர் மோகனா மற்றும் ஸ்ரீ மகேஷ் வித்யாலயா  பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசி ரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

காங்கேயத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது இந்து முன்னணியினர் கொலைவெறி தாக்குதல்

திருப்பூர், அக். 14 - திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மருத்துவமனை முன்பாக ஆம்பு லன்ஸ் ஓட்டுநர்கள் இருவர் மீது இந்து  முன்னணி குண்டர்கள் கொலைவெறித்  தாக்குதல் நடத்தினர். இப்பிரச்சனை யில் இந்து முன்னணியின் வன்முறை நட வடிக்கை மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நகரில் சட்டம் ஒழுங்கைப் பாது காக்க வேண்டும் என அரசியல் கட்சிகள்,  பொது நல அமைப்புகள் காவல் துணை  கண்காணிப்பாளரிடம் நேரில் வலியு றுத்தி உள்ளன.  வியாழன் இரவு 8 மணியளவில் காங் கயம் அரசு மருத்துவமனை முன்பாக ஆம்புலன்ஸ் வண்டி நிறுத்துவது தொடர்பான பிரச்சனையில் ஜோதிமு ருகன் என்பவரின் ஆம்புலன்ஸ் வாகன  ஓட்டுநர்கள் இருவர் மீது இந்து முன் னணி ஆம்புலன்ஸ் சங்கம் எனும் பெய ரில் அங்கிருந்த வேறு ஆம்புலன்ஸ்  வாகனத்தினருடன் இந்து முன்னணி  குண்டர்கள் இருபதுக்கும் மேற்பட் டோர் சேர்ந்து கொண்டு கொலைவெறி  தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால்  அரசு மருத்துவமனை வளாகமே  பெரும் பதற்றத்திற்கு உள்ளானது.  இது பற்றி தகவல அறிந்து அங்கு  வந்த மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி, விடு தலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல்  கட்சியினர் மற்றும் தற்சார்பு விவசாயி கள் சங்கம், ஆதித்தமிழர் பேரவை, புரட் சிகர இளைஞர் முன்னணி, திராவிடர் கழ கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந் தோர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்றனர். காவல் துணை கண்காணிப்பா ளரிடம் நடந்த சம்பவம் குறித்து முறை யிட்டு உடனடியாக காவல் துறை தலை யிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.  குற்றவாளிகள் மீது உரிய சட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய்து நடவ டிக்கை எடுக்கவும், பொதுமக்களுக்கு இடையூறாக  அமைத்திருக்கும் இந்து முன்னணி சங்க கொட்டகையை அகற்ற வும், தொடர் வன்முறை மற்றும் குற்றச்  சம்பவங்களில் ஈடுபடும் இந்து முன்ன ணியினர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். அத்துடன் காங்கேயம் வட்டாட்சி யரிடமும் இது குறித்து புகார் தெரிவிக் கப்பட்டது. இத்துடன் நகராட்சி, நெடுஞ் சாலை, காவல்துறைக்கு எழுத்துப்பூர் வமாக புகார் அளிக்கவும் அனைத்து அமைப்புகள் முடிவு செய்துள்ளனர். 

பல்லடம் ஒன்றிய பகுதிகளுக்கு பேருந்து விட கோரிக்கை

திருப்பூர், அக். 14 - பல்லடம் நகராட்சியின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து  ஆய்வுக் கூட்டம் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் பல்லடம் மணி மஹாலில் வெள்ளி யன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்  எஸ்.வினீத் கலந்து கொண்டார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய குழு வின் சார்பாக ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், அமைச்ச ரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், பல்லடம் ஒன்றிய பகு தியில் புளியம்பட்டி, மாணிக்காபுரம், வலையபாளையம் உள் ளிட்ட கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதிகளை முழுமை யாக செய்து தர வேண்டும். பல்லடம் நகர்ப் பகுதியில் நடை பெற்று வரும் சாலை விரிவாக்க பணிகளில் ஆக்கிரமிப்பு களை முறையாக அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய  வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பதவி ஏற்பு

திருப்பூர், அக். 14 -  திருப்பூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணி கள் இணை இயக்குனராக மருத்துவர் நா.கனகராணி வெள் ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஐஓசி: ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்கு: வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு அழைப்பு

ஈரோடு, அக்.14- இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே நடத்த வலியுறுத்தி சிஐ டியு வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பணிபுரி யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு உடனடியாக சங்கங்ளை அழைக்க வேண்டும். நிரந்தர தொழிலாளர் சங்கத்தை பயன்படுத்தி ஒப்பந்த தொழிலாளர் களை பழிவாங்கக்கூடாது என வலியுறுத்தி தென்னிந்திய பிளாண்டுகளில் அக்டோபர் 21ஆம் தேதியன்று இரண்டு மணி நேரம் வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு அழைப்பு விடுத்துள் ளது.  இதன்தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை யில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் உள்ள ஐஓசி கிளை யில் தமிழ்நாடு பெட்ரோல் மற்றும் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சிஐடியு பெருந்துறை கிளை கூட்டம் நடைபெற்றது.  கிளை தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில் சிஜடியு மாநில உதவி தலைவர் கே.விஜயன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். சிஐடியு பெருந்துறை தாலுகா செயலாளர் எஸ். என்.மயில்சாமி, துணைதலைவர்கள் என்.பாலசுப்பிரமணி, குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அக்.21 ஆம் தேதியன்று 2 மணி நேரம் வேலை நிறுத்தம் செய் வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

போதை மாத்திரை விற்றவர் கைது

கோவை, அக்.14- கோவையில் போதை மாத்திரை விற்றவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 45 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்ப னையை தடுப்பு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இந்நிலையில், தெற்கு உக்கடம் கழிவு நீர் குட்டை  அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு  சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந் தேகம்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் வலி நிவாரணிக்கு பயன் படும் மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்தது.  இதையடுத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட  புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த காஜா உசேன் (23)  என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 45  போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்  அவருக்கு மாத்திரை எங்கு கிடைத்தது, இதில் வேறு யாருக் கேனும் தொடர்பு உள்ளதா? என கடைவீதி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏர் ஹாரன்கள் அகற்றம்

அன்னூர், அக்.14- பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து களில் அதிக சப்தத்துடன் ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்களை போக்குவரத்து துறையினர் அதிரடியாக அகற்றினர்.  கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மையப்பகுதியாக அன்னூர் இருந்து வருகிறது. அன்னூரில் இருந்து, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையத்திற்கு அரசு  மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. மேலும்,  தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை யாக சத்தி சாலை இருந்து வருகிறது. இந்நிலையில் இவ் வழித்தடங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக வேகத்துடன்,ஏர் ஹாரன்களை அலற விட்ட படி செல்வது குறித்து தொடர்ந்து காவல் துறையினருக் கும்,போக்குவரத்துத்துறையினருக்கும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.  இந்நிலையில் மேட்டுப்பாளையம் வட்டாரப்போக்கு வரத்து அலுவலகத்தில் இருந்து மோட்டார் வாகன ஆய்வா ளர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் நித்யா,எஸ்ஐ கனக ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளியன்று அன்னூர் பேருந்து  நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடையை மீறி 15 அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் தடையை மீறி  பொருத்தப்பட்டிருந்த 15 ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டுள் ளன. மீண்டும் பொருத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

கோவை, அக்.14- கோவையில் பெண்ணி டம் தங்க நகையை பறிக்க  முயன்றவரை காவல் துறை யினர் தேடி வருகின்றனர். கோவை ரத்தினபுரியை அடுத்த என்.ஜி.தெருவைச் சேர்ந்தவர் அஸ்மிதா (26).  இவர் தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது தலைக் கவசம் அணிந்தபடி இருசக் கர வாகனத்தில் பின்னால் வந்த வாலிபர் ஒருவர் திடீ ரென அஸ்மிதாவின் கழுத் தில் கிடந்த 8 பவுன் தங்க  செயினை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்மிதா நகையை விடா மல் இறுக்கமாகப் பற்றிக் கொண்டதால், அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட முயன்ற நபரை தேடி வருகின்றனர்.