ஈரோடு, பிப்.8- களப்பணியாளர்களின் பணிச் சுமையைக் குறைத்தல் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு நில அளவை அலுவ லர்கள் ஒன்றிப்பு சார்பில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. களப்பணியாளர்களின் ஒட்டு மொத்த பணியினையும் கருத்தில் கொள்ளாமல், உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்விற்குட் படுத்தும் போக்கினை கைவிட வேண்டும். நில அளவர் மற்றும் கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட காலிப் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புற ஆதார, ஒப்பந்த முறை யில் புல உதவியாளர் நியமனத்தை கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் நிரந்தரமாக பணியமர்த்தப்பட வேண்டும். மாவட்ட அளவில் நவீன மறு நில அளவைத் திட்ட பணிகளை தனி உதவி இயக்குநர் தலைமையில் ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு தர்ணா போராட்டம் நடை பெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற மாலை நேர நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ப.கௌரி சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அ. விஜயராஜன் வரவேற்றார். மாநில செயலாளர் த.சக்திவேல் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர் வே.சுந்தர லிங்கம், அரசு ஊழியர் சங்க வட்ட செய லாளர் டி.கோமதி, சந்திரமௌலி, எட்வின் பிரசாத் ஆகிய சகோதர சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.விஜயமனோகரன் நிறைவுரையாற்றினார். முடிவில் சங்கத்தின் ஈரோடு கோட்ட துணை தலைவர் கு.சரண்யா நன்றி கூறினார். கோவை இதேபோன்று தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் கோவை மாவட்ட மையம் சார்பில் கோவை சிவானந்தகாலனி பவர் ஹவுஸ் அருகே நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நிமலன் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ச. தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். பொருளாளர் செ.வேல்முருகன் வர வேற்புரையாற்றினார்.
தர்ணா போராட்டத்தை துவக்கிவைத்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் த. சதீஷ்குமார் உரையாற்றினார். இணை செயலாளர் இரா.சுரேந்திரன் சிறப்பு ரையாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ச.ஜெகநாதன், செய லாளர் ப.செந்தில்குமார் மற்றும் நிர் வாகிகள், எஸ்.சையது உசேன், எஸ். ரமேஷ், வேலுமணி, ந.மீனாட்சி உள் ளிட்டோர் உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர். தருமபுரி தமிழ்நாடு நில அளவை அலுவ லர்கள் ஒன்றிப்பின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கி.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் க.தவமணி முன் னிலை வகித்தார். கோட்டத் தலைவர் அ.சங்கீதா வரவேற்றார். மாவட்ட செய லாளர் சி.பிரபு தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார். இதில், மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் முருகன், கோட்ட செயலாளர்கள் துரை சின்னராசு, தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் பி.எஸ்.இளவேனில் உள் ளிட்டோர் உரையாற்றினர். மாநிலச் செயலாளர் ரா.கல்பனா நிறைவுரை யாற்றினார்.