districts

மலைவாழ் மக்கள் சங்கத்தின் விடாமுயற்சிக்கு வெற்றி

திருப்பூர், டிச. 22 - திருப்பூர் மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தின் விடாமுயற்சி காரணமாக திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு தார்ச்சாலை அமைக்க வெள்ளியன்று நில அளவைப் பணி நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் செட்டில்மெண்டுகள் உள்ளன. இதில், வாழும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வன உரிமைச் சட்டப்படி இவர்களுக்கு நிலப்பட்டா, சாலை வசதி ஆகிய வை செய்து தரப்பட வேண்டும். எனினும் வனத்துறை மற்றும் வரு வாய்த் துறையினர் இவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதில் உரிய அக்கறை செலுத்தாமல் காலம்  கடத்தி வந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் இந்த பகுதி யில் உள்ள செட்டில்மெண்ட் மலை வாழ் மக்களுக்கு உரிய அடிப்படை  வசதிகள் செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் உள்ள குருமலை செட்டில்மெண்டில் இருந்து அங்கு வாழும் மக்களின் மருத்துவ அவசர தேவைக்காக திரு மூர்த்தி மலைக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இப்பகுதியில் வாழும் மக்க ளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட் டால் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு வருவதற்கு சாலை வசதி இல்லை. பாதிக்கப்பட் டவர்களை தொட்டில் கட்டி அதில் அவர்களை வைத்து இளைஞர்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே  வந்து சமவெளி பகுதியில் உள்ள  மருத்துவமனைக்கு வர நேரிடு கிறது.

இந்நிலையில், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் கோ. செல்வன் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தளி பேரூராட்சி துணைத் தலைவராகவும் பணி யாற்றி வருகிறார். கடந்த காலங் களில் மலை வாழ் மக்கள் சங்கத்தின்  சார்பாக போராட்டம் நடத்தியதுடன், பேரூராட்சி துணைத் தலைவர் என்ற முறையில் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகளுக்கும் கோரிக்கை மனு  அளித்தார். அத்துடன் தளி பேரூ ராட்சி மன்றத்திலும் குருமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தி தருவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.வினித், வருவாய்த் துறையினர், வனத்துறையினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கொண்ட கூட்டத்தை நடத்தி, இப்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தி, குருமலைக்கு சாலை வசதி செய்து தருவது என முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், வெள்ளிக் கிழமை திருமூர்த்தி மலையில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறுமலைக்கு தார்ச்சாலை அமைக்க நில அளவை  பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக  தளி பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள்  சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகை யில், இது முதல் கட்டமான முன் னேற்றம். தற்போது மிகக் குறுக லான ஏற்ற இறக்கமான மலை பாதையை தான் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றோம். தார்ச் சாலை அமைக்கப்படும் பொழுது மருத்துவமனைக்கு செல்வதற்கும், விவசாய விளைபொருள்களை கொண்டு செல்வதற்கும் இந்தப் பாதை மிகப்பெரும் வாய்ப்பாக அமையும், மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இந்த சாலை அமைக்கப்படு வதை தொடர்ந்து ஜல்லிப்பட்டி முதல் ஈசல் திட்டு வரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கும், திருமூர்த்தி மலையில் இருந்து ஜல்லி முத்தாம் பாறை வரை ஒன்றரை கிலோ மீட்டர்  தூரத்திற்கும் தார்ச்சாலை அமைத் தால் பெரும்பான்மையான மலை வாழ் மக்கள் சாலை வசதி பெற முடியும் என்றும் தெரிவித்தனர். மலைவாழ் மக்கள் சங்கம் மேற் கொண்ட விடாப்பிடியான தொடர் முயற்சிக்கும் போராட்டத்திற்கும் தற் போது வெற்றி கிட்டும் நிலை ஏற்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.