districts

உழவர் சந்தைக்கு வந்த விவசாயிகள் திடீர் போராட்டம்

திருப்பூர், ஜூன் 29- திருப்பூர் உழவர் சந்தைக்கு வந்த விவசா யிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பர பரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகி றது. இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் இருந்து விவசாயிகள் நூற்றுக் கணக்கானோர் வந்து தங்கள் தோட்டங்க ளில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உழவர்  சந்தைக்கு வெளிப்புறமாக பல்லடம் சாலை யில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வியா பாரிகள் சாலையோரமாக கடை அமைத்து  காய்கறிகளை வியாபாரம் செய்வதால், உழ வர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் உள்ளே வராமல், சாலையோர வியாபாரிகளி டம் வாங்கிச் செல்லும்நிலை ஏற்படுகிறது. இத னால் உழவர் சந்தை விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படுவதாக கூறினர். அதே போல் உழவர் சந்தைக்கு அருகாமையில் உள்ள தினசரி சந்தை காலை 8 மணி முதல்  இரவு 8 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நி லையில் காலை 8 மணிக்கு முன்பாக உழவர்  சந்தை நேரத்திலேயே செயல்படுவதாலும், விவசாயிகளின் வியாபாரம் பாதிக்கப்படுகி றது. மேலும் உழவர் சந்தையில் விவசாயிக ளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள்  எதுவும் இல்லை என குற்றம்சாட்டி விவசா யிகள் புதனன்று காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக  அறிவித்திருந்தனர்.  இதையடுத்து விவசாயிகள் மற்றும் விவ சாய சங்க நிர்வாகிகள் உழவர் சந்தைக்கு வந் திருந்த நிலையில், நள்ளிரவிலேயே மாநக ராட்சி அலுவலர்கள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரி கள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிக ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையோ ரம் கடை அமைக்காதவகையில் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், உழவர்  சந்தையின் வசதிகள் குறித்து கோட்டாட்சி யர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்ப டும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத் தைக் கை விட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாத பட் சத்தில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப் படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.