திருப்பூர், ஜன.9- மௌலானா ஆசாத் மற் றும் பிரீ மெட்ரிக் கல்வி உத வித் தொகையை நிறுத்தி வைத்து சிறுபான்மை மாண வர்களின் உயர்கல்வி கனவை நசுக்கும் ஒன்றிய அரசை கண் டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு இந்திய மாணவர் சங்கத் தினர் திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுப்பட்டனர். மாநிலக்குழு உறுப்பினர் ஷாலினி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டதில் மாவட்ட தலைவர் பிரவீன் குமார், மாவட்ட துணைத்தலைவர் கல்கி ராஜ் ஆகியோர் ஆர்ப் பாட்டம் குறித்து பேசினர். மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிகண்டன், மோகனா, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பள்ளி மாணவர் கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் டனர்.