கோவை, ஜன.13- கோவையில் அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் பொங்கல் திருநாளை மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடினர். தமிழர்களின் திரு நாளாம் பொங்கல் விழா வரு கிற 15ஆம் தேதி கொண்டா டப்பட உள்ளது. இதனை யொட்டி, பொங்கல் பண்டி கைக்கு முன்னதாக பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டா டப்படுவது வழக்கம். இவ்விழாவில் பொங்கல் வைத்து பாரம்பரிய நடனமாடி மாணவ, மாணவிகள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். கோவை அரசு கல்லூரி, நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. கொரோனா காலத்திற்கு பிறகு முதன் முறையாக கொண்டாட்டம் நடைபெறுவதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். கல்லூரி வளாகத்தில் பொங்கல் பானைகள் வைத்து மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து சக மாணவர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் வழங்கினர். கோவை எஸ்என்ஆர் கல்லூரியில் நடை பெற்ற விழாவில் பாண்டியாட்டம், நொண்டி யாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடை பெற்றன. மேலும் அரிசி குத்தல், அம்மி அரைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய சமையல் முறைகளையும் மாணவ, மாணவிகள் செய் தனர். இதனைத் தொடர்ந்து பாரம்பரிய கலை களான சிலம்பாட்டம், கும்மி அடித்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், “இந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மூலமாக நமது பாரம்பரியம் குறித்து தெரிந்து கொண்டோம். கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு நாங்கள் கல்லூரியில் கொண்டாடும் முதல் பொங்கல் என்பதால் உற்சாகமாக உள்ளோம்.” என்றனர்.