தருமபுரி, ஏப்.4- கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் மனுக்களை திரும்பப் பெறும் போராட்டம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. அரூர் ஊராட்சி ஒன்றியம், செல்லம் பட்டி ஊராட்சி கிளானூர் கிராமத்திற்கு குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, மனை பட்டா, பேருந்து வசதி, மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுக் கப்பட்டது. இவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆவேமடைந்த பொது மக்கள் திங்களன்று விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் மனுக்களை திரும்பப் பெறும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்திற்கு, ஒன்றிய பொரு ளாளர் டி.ஜடையாண்டி தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் எம்.முத்து, மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன், ஒன்றிய தலைவர் எம்.தங்காஜ், ஒன்றிய செயலாளர் கே.குமரேசன், பொன்னுசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுணன், ஒன்றிய செயலாளர் பி.குமார், விவ சாயிகள் சங்க வட்ட செயலாளர் எஸ்.கே.கோவிந்தன், மாற்றுத்திறானாளிகள் சங்க வட்ட செயலாளர் சி.பழனி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். இந்த போராட்டத்தில் கிளானூர், கொத் தனாம்பட்டி கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்க ளுக்கு மனைபட்டா வழங்க வேண்டும். அரூரிலிருந்து கிளானூர் வழியாக கொத்த னாம்பட்டி வரை அரசு பேருந்து இயக்க வேண்டும். கிளானூர் கிராமத்திற்கு நுாலக வசதி, பகத்சிங் நகருக்கு நிழற்கூடம், கழிப்பறை வசதி ஆகியவற்றை ஏற்ப டுத்த வேண்டும். அரசு கட்டி கொடுத்த பழுத டைந்த தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தை முறையாக செயல்ப டுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டது. இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.