கோவை, மார்ச் 13- சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள வடமாநில தொழிலாளர்கள் தமிழ் நாட்டுக்கு திரும்ப இலவச சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோவை யில் உள்ள தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வசந்த காலத்தை வரவேற்க மார்ச் மாதத்தில் வடஇந்தியர்கள் வெகுவிமர்சையாக ஹோலி பண் டிகை கொண்டாடுவர். இந்நாளில், இதர மாநிலங்களில் பிழைப்பிற்காக சென்றவர்கள் சொந்த ஊர் சென்று ஹோலி பண்டிகையை கொண்டாடி விட்டு மீண்டும் திரும்புவது வழக்கம். இந்நிலையில், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பாஜக வினர் கிளப்பிய வதந்தி காரணமாக இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுத லாக வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென் றனர். பாஜகவினர் திட்டமிட்டு பரப் பிய வதந்தி என்பதை தமிழ்நாடு அர சும், பீகார் மாநிலமும் அம்பலப்ப டுத்தி, சம்பந்தப்பட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்து பதட் டத்தை தனித்தனர். இந்நிலையில், ஹோலி பண்டிகை முடிவுற்ற நிலை யில் சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தமிழ் நாட்டுக்கு திரும்ப இலவச சிறப்பு ரயில் விட வேண்டும்
என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ள னர். இதுகுறித்து, மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறு கையில், ‘‘வதந்தியை தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் மத்தி யில் ஏற்பட்ட பீதியை போக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது. சொந்த ஊர் சென்றுள்ள தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். நல்லிணக்க நடவடிக் கையாக இலவச சிறப்பு ரயில்களை இயக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்” என்றார். வார்ப்பட தேசிய தொழில் அமைப் பான தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்(ஐஐஎப்) கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வ நாதன் கூறுகையில், “வதந்தி பரவி னாலும் பெரிய அளவில் தொழில் நிறுவனங்களில் பாதிப்பு ஏற்பட வில்லை. ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின்போது 50 சதவிகித தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்தாண்டு வதந் தியால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கூடுதலாக 15 சதவிகிதம் பேர் சென் றுள்ளனர். 15 அல்லது 20 நாட்களுக்கு பின் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பு வார்கள்” என்றார். தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற் பாலைகள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, “சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் தொழிலாளர்களின் பெற் றோர் அச்சமடைந்தனர். இதன் கார ணமாகவே தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்க ளின் பெற்றோரும் தற்போது உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டனர். எனவே, தொழிலாளர்கள் மீண்டும் வரும் 20 ஆம் தேதி முதல் தமிழ்நாட் டுக்கு வர தொடங்குவார்கள். சிறப்பு ரயில்களை இயக்கினால் தொழிலா ளர்களுக்கு உதவியாக இருக்கும். இது குறித்து அரசு பரிசீலிக்க வேண் டும்” என்றார்.