கோவை, நவ.3- பருவமழையை தொடர்ந்து முன்னெச்சரிக் கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவ மனையில் சிறப்பு காய்ச்சல் பிரிவு அமைக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்.29 ஆம் தேதி தொடங்கியது. கோவையிலும் கடந்த 2 நாட்களாக மழை தொடர்ந்து பெய்துவருகிறது. பருவ மழை காலங்களில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகளுடன் சிறப்பு காய்ச்சல் பிரிவு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் கூறுகையில், பருவமழை காலங்களில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும். தற்போது புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் பாதிப் புடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பருவமழை தீவிர மடையும்போது நோய்த்தொற்று பாதிப்பு களும் அதிகரிக்கும். அப்போது உள் நோயாளிகளாக சிகிச்சை எடுத்து கொள்ப வர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு 40 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு காய்ச்சல் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு சிகிச்சைக்கு ஏற்கனவே தனி பிரிவு செயல்பட்டு வருகிறது. டெங்கு மற்றும் சிறப்பு காய்ச்சல் பிரிவுகளில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது, என்றனர். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பருவமழை காலங்களில் குடிநீர் மூலம் அதிகளவு நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலங்களில் கட்டாயம் குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிதான் குடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீரை மட்டுமே கொடுக்க வேண்டும். பள்ளி மாணவா்களிடையே காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடி யாக அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும், என்றனர்.