ஈரோடு, ஏப்.29- செட்டில்மென்ட் பகுதிகளிள் சாலை வசதி, பேருந்து வசதிகளை செய்து தரப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் வலியுறுத்தினர். ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி தலைமையில் வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்க பிரநிதிகள் பங்கேற்று கோரிக்கை மனுக் களை அளித்து பேசினர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி பேசுகையில், சத்தியமங்கலம் வட்டம், குத்தியாலத்தூர், மணிமேகலைபுரம் பகுதி யில் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் மக்காச் சோளம் பயிர் செய்துள்ளனர். இவர்களுக்கு பசுவனாபுரத்தை மையப்படுத்தி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். வரதம்பாளையம் கிராமத்தில், பெரியகுளம் ஏரிக்கு வரக்கூடிய 4 நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தியமங்கலம் வட்டம், உளியம் உள்ளிட்ட 7 செட்டில்மென்ட் பகுதிகளிள் சாலை வசதி, பேருந்து வசதி செய்யப்பட வேண்டும். வனவிலங்குகள் தரைப்பகுதியில் உள்ள விவசாயத்தை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குன்றி பகுதியில் அண்மையில் 4 பேர் யானையால் கொல்லப்பட்டுள்ளனர். அதனைப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல இதுவரை யில் நடவடிக்கை இல்லை. உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு-கோபி நெடுஞ்சாலை விரி வாக்கப்பணிக்காக கையகப்படுத்த நிலங் களுக்குரிய விவசாயிகளுக்கு அவார்டு காப்பி கொடுக்க வேண்டும் என்றார். இக்கூட் டத்தில், தவிச நிர்வாகிகள் கே.ஆர்.திருத்த ணிகாசலம், சொங்கப்பன், பரமசிவம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.