districts

img

சோமனூர் சி.குருசாமி படத்திறப்பு பி.ஆர்.நடராஜன் எம்பி., பங்கேற்பு

திருப்பூர், ஜூன் 22 - கோவை, சூலூர் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள்  செயலாளர் தோழர் சி. குருசாமி நினைவேந்தல் நிகழ்வு சோமனூரில் வியா ழனன்று நடைபெற்றது. சோமனூர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உழைக்கும் மக்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்  பின்னால் அணிதிரட்டியவர் சி.குருசாமி. உடல் நலக்குறைவு காரணமாக அண்மை யில் அவர் காலமானார்.  இதையடுத்து, தோழர் சி.குருசாமி நினை வேந்தல் நிகழ்வு சோமனூரில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சூலூர் தாலுகா செய லாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு தோழர் குருசாமி படத்தை திறந்து  வைத்து மலரஞ்சலி செலுத்தி, அவரது பல் வேறு மக்கள் பணிகள் குறித்து நினை வேந்தல் உரை நிகழ்த்தினார்.  இந்நிகழ்வில், சாமளாபுரம் பேரூராட்சித்  தலைவர் விநாயகா பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கருமத்தம்பட்டி 25ஆவது  வார்டு கவுன்சிலர் பி.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரம சிவம், இந்திய கம்யூனிஸ்ட் சூலூர் வடக்கு  ஒன்றியச் செயலாளர் பி.எஸ்.ராமசாமி, கணியூர் ஊராட்சிமன்றத் தலைவர் வேலுச் சாமி, கோவை மாவட்ட விசைத்தறி தொழி லாளர் சங்க செயலாளர் எஸ்.ஜோதிபாசு உள்ளிட்டோர் தோழர் குருசாமியின் பணி களை நினைவு கூர்ந்தனர். பல்வேறு அரசியல்  அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.