districts

கேரளத்தில் சமூக முன்னேற்றம்

குடிப்பதற்குக் கஞ்சியும் உடுப்பதற்கு வேட்டியும் உறங்குவதற்கு ஒரு குடிசையும் கேட்பவர்களை கம்யூனிஸ்ட்டுகள் என்றும் போல்ஷ்விக்குகள் என்று விளித்திருந்த காலமொன்று இருந்தது கேரளத்தில். அதிலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்களின் இரத்தத்தையும் உயிரையும் விலையாகக் கொடுத்து போராடிப் போராடிதான் இன்றைய இந்தக் கேரளம் உருவானது. கேரளத்தின் சமூக முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கு இரண்டறக் கலந்துள்ளது. 
நிலச்சீர்திருத்தம், பொதுக்கல்வி வளர்ச்சி, எழுத்தறிவு, மக்கள் நலத்திட்டங்கள், சமூகநலத் திட்டங்கள், இயற்கை  விவசாயம், லைஃப், அரவணைப்பு, பட்டினியில்லா திட்டம்... என கேரளம் கண்ட சமூக முன்னேற்றங்களிலெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் குறிப்பாக சிபிஐ(எம்)-ன் பங்களிப்பு இடம்பெற்றுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை உருவானதும் அங்கீகாரம் பெற்றதும் கட்சியின் மாநாடுகளில்தான். பிற கட்சிகளிலிருந்து வித்தியாசமாக சிபிஐ(எம்) கட்சி மாநாடுகளை மக்கள் நெஞ்சோடு சேர்த்தணைப்பதில் ஆச்சரியமில்லை.