சேலம், மார்ச் 17- பணி ஓய்வு பெற்று 10 வருடம் கடந்தும் தணிக்கை என்ற பெயரில் பணத்தைப் பிடித்து செய்யும் பட்டு வளர்ச்சி துறையின் செய லுக்கு தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சேலம் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தின் தலைவர் ஏ.பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் பட்டு வளர்ச்சி துறையில் கடைப் பிடித்து வரும் ஊழியர் விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பட்டு வளர்ச்சி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் கடந்தும் தணிக்கை என்ற பெயரில் பிடித்தம் செய்யக் கூடாது, இளநிலை பட்டு ஆய்வாளர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் கணக்கிட்டு தேர்வுநிலை சிறப்பு நிலை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விரைவில் இயக்குனர் பட்டு வளர்ச்சி துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில், மண்டல செயலாளர் ஜி.கருணா நிதி, மண்டல துணைத் தலைவர் பி.கே. பெரியசாமி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட செயலாளர் சி. ராஜ்குமார், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.கோவிந்தசாமி உள்ளிட் டோர் பங்கேற்று உரையாற்றினர்.