கோவை, ஜூலை 16– அத்தியாவசி உணவுபொருட்க ளான அரிசி மீது ஈவு இரக்கமற்று ஒன்றிய பாஜக அரசு ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதை கண்டித்து கோவையில் சனியன்று அனைத்து அரிசி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஒரு நாள் கடையடைப்பு போராட் டத்தால் பலகோடி ரூபாய் வர்த்தக பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு கார்ப்ரேட் டுகளுக்கு தொடர்ந்து வரிச்சலுகை அளித்து வருகிறது. மறுபுறம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தி யாவசிய பொருட்கள் மீது வரிக்கு மேல் வரி விதித்து அவதிக்குள்ளாக் குகிறது. இந்நிலையில் கடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் அரிசி, பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் ஒன்றிய பாஜக அரசு ஜிஎஸ்டி வரிவிதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதன்ஒருபகுதியாக அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும் பப் பெற வலியுறுத்தி தமிழகம், ஆந் திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்தொடர்ச்சி யாக கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 400க்கும் மேற்பட்ட மொத்த, சில் லறை அரிசி விற்பனை கடைகள் மற்றும் வியாபாரிகள் கடைகளை அடைத்து ஒன்றிய அரசிற்கு தங்க ளின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் பல கோடி ரூபாய் வர்த்த கம் பாதிப்படைந்துள்ளது. கோவை வைசியாள் வீதி, ரங்கே கவுடர் வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட அரிசி கடை வீதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந் தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதிகள் வெறிச் சோடி காணப்பட்டது. இது குறித்து கோயமுத்தூர் அரிசி கடை வியாபாரிகள் சங்கத் தின் நிர்வாகிகள் சுல்தான், சரவணக் குமார், குமரேசன், ராஜ்குமார், ஞானகுமார் கூறுகையில், அரசி யின் மீது விதித்துள்ள இந்த வரி விதிப்பால், சாமானிய மக்கள் பெரி தும் பாதிப்படைவார்கள். தற்போ தைய விலையில் இருந்து 3 முதல் 5 ரூபாய் வரை அரிசியின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வேளாண்மை சார்ந்த உணவு உற் பத்தியாளர்கள் மட்டுமின்றி பொது மக்கள் பெரிதும் பாதிப்படைவார் கள். உடனடியாக ஒன்றிய அரசு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும் என்றார்.