சேலம், நவ.21- தமிழக அரசின் கேபிள் டிவி சேவை முடக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ கம் முழுவதும் கேபிள் டிவி ஆப்ரேட் டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். கடந்த மாதம் 5 நாட்கள் அரசு கேபிள் டிவி சேவை தொழில் நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதனால் சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் அரசு கேபிள் டிவி இணைப்புகள் தனியார் வச மானது. மீதமுள்ள இரண்டு லட்சத் துக்கு மேற்பட்ட இணைப்புகளை கொண்டு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நடத்தி வந்த நிலையில், கடந்த நவ.19 ஆம் தேதி முதல் மூன்று தினங்களாக தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி சேவை முழுவதும் முடங்கியுள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக முடங்கப்பட்டதாக தகவல் வெளியா னது. மேலும் இந்த தடங்களை பயன் படுத்தி தனியார் கேபிள் டிவி நிறுவனங் கள் அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர் களை கவரும் வகையில் வீடு, வீடாக சென்று நாங்கள் இணைப்பு வழங்கி வாடிக்கையாளர்களை மாற்றி வரு கின்றனர். இந்நிலையில், திங்களன்று சேலம் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நடத்தி வரும் கேபிள் ஆப்ரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக வந்திருந்த னர். அப்பொழுது காவல் துறையினர் அவர்களுக்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொ ழுது பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்த கேபிள் டிவி வட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜாவையும், முற்றுகையிட்டு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் வாக் குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மாலை 5 மணிக்குள் இந்த கோளாறு சரி செய்யப்படும் என வாக் குறுதி அளித்ததைத்தொடர்ந்து, அனை வரும் கலைந்து சென்றனர். இதேபோல் கோவை, தருமபுரி மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டு, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.